பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூலை 21, 2020

நானே இன்னும்...


   "இவன் பண்ணிருக்கற காரியத்துக்கு இவனை அடிக்காம என்ன செய்ய சொல்றீங்க...?"

 "..."

 "நீங்க ஒன்னு.. இவன் பண்ண காரியத்துக்கு இவனை...."

"..."

   "என்ன பேசறீங்க நீங்க....??என்ன பேசறீங்க...? எப்படி விட முடியும்..? இன்னிக்கு இவனை அடிக்கற அடில....."

"..."

   "நானா இருக்கிறதால அடிச்சிகிட்டு இருக்கேன்.. வேற யாரும் இருந்தா இந்நேரத்துக்கு இவனை கொலையே செய்திருப்பாங்க...."

"..."

   "விடுங்க.... என்னைய தடுக்காதீங்க.. இவனோட கை காலை ஒடிச்சாதா எனக்கு நிம்மதி... இவன் பண்ணிருக்கற காரியத்துக்கு...."

"..."

  "பின்ன என்னங்க பின்ன... மொளைச்சி மூனு இல கூட வரல.. இவனை..."

"..."

 "என்னைய தடுக்காதீங்க... இன்னையோட இவன் கண்ணை நோண்டிடறேன்..."

"..."

   "என்ன காரியம் பார்த்திருக்கான் தெரியுமா இவ...."

"..."

   "அட இருங்க நாலு அடி அடிச்சிக்கிறேன்..."

"..."

  "என்ன காரியம் தெரியுமா செஞ்சிருக்கான்...? என் மச்சினிச்சி குளிக்கறத வேடிக்கை பார்த்திருக்காங்க..."

"..."

 "ஏது..! சின்னப்பையன் மன்னிச்சிடனுமா..?"

"..."

  "எப்படிங்க இவனையெல்லாம் மன்னிக்கிறது... அவள நானே இன்னும் பாக்கல தெரியுமா......?"

"!!!"


#தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்