பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூலை 26, 2020

ராமனும் கிருஷ்ணனும்



   இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. இன்றுதான் பிறந்தகம் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. விமான நிலையத்தில் இருந்தே நேராக ராமனைப் பார்ப்பதற்காகத்தான் சென்றுக் கொண்டிருந்தான் கிருஷ்ணன். இவர்கள் இருவருக்கும் எப்படி இந்த பொருத்தமான பெயர் அமைந்தது என வியக்காதவர்கள் இல்லை. 

    இவர்கள் பழகியது என்னவோ ஒரு வருடம்தான். ஆனால் அவர்களின் நட்பு அவர்களின் பெயருக்கு ஏற்றார் போல அத்தனை நெருக்கமாக இருக்கிறது. 

   தற்கொலைக்கு முயன்ற தருணத்தில்தான் கிருஷ்ணன், ராமனைக் காண நேர்ந்தது. அவனது கண்களில் இருந்த தீர்க்கமும் அன்பும் கிருஷ்ணனுக்கு தன் வாழ்க்கையின் மீது  பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது. அதன் பிறகு அவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். 

    கிருஷ்ணன் தன் மீது கொண்ட தீரா அன்பின் காரணத்தால் அவனை சிலர் தவறாக பேசினார்கள். ராமனுக்கு ஏதாவது செய்ய வேண்டும் போல தோன்றியது. உடனே கிருஷ்ணனுக்கு சிங்கப்பூரில் வேலை வாங்கிக் கொடுத்தான். இரண்டு மாத பிரிவு என்றாலும் இருவரும் நொடிக்கு நொடி தொலைபேசியில் பேசிக் கொண்டும் முகத்தைப் பார்த்துக் கொண்டும் இருந்தார்கள். இருவருக்குள்ளும் எந்த ஒளிவுமறைவும் இல்லை. 

   இன்று, ராமனைக் கண்டதும் கிருஷ்ணனுக்கு கண்கள் கலங்கிவிட்டன. தன் வாழ்வில் ஒளி ஏற்றி வைத்த முகம் அல்லவா அது. ராமனுக்கும் அவ்வாறுதான். இப்படியொரு அப்பழுக்கற்ற நட்பை காண்பது அறிதுதானே.

    அப்போழுதுதான் அவளும் ராமன் அருகில் வந்து நின்றாள். ராமன், தான்  அவளைத்தான் திருமணம் செய்யவிருப்பதாக ஏதோ பெயரைச் சொல்லி அறிமுகம் செய்தான். 

    இருவரையும் வாழ்த்திவிட்டு வேறெதையும் பேசாது கிளம்பினான் கிருஷ்ணன்.

     இரவு. வீடு. கதவு. அறை. அங்கு கிருஷ்ணன் தூக்கில் தொங்கிக் கொண்டிருக்கிறான். அவனால் இன்னொரு இழப்பை தாங்க முடியவில்லை போலும்....


#தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்