பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூலை 28, 2020

அன்புள்ள அக்காவிற்கு...

அக்கா..... 
    நீங்கள் இந்த கடிதத்தை வாசிக்கும் போது நான் இங்கிருக்க மாட்டேன். என்னை மன்னித்து விடுங்கள். உங்களைப் போன்ற சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்களைப் பார்ப்பது கடினம். என்னைப் போன்ற பல பெண்களுக்கு நீங்கள் ஓர் உதாரணம். எத்தனையோ பெண்கள் உங்களால் நல்வாழ்வு வாழ ஆரம்பித்துள்ளார்கள்.

   உங்களைச் சந்திக்காமல் இருந்திருந்தால் நான் எப்படி எப்படியோ போயிருப்பேன். திக்கற்று கிடந்த எனக்கு நீங்கள் மறுவாழ்வு கொடுத்தீர்கள். உங்களை என் தெய்வமாகவேப் பார்க்கிறேன். எனக்கு மறுவாழ்வு தந்ததோடு எனக்கு உங்கள் வீட்டிலேயே அடைக்களம் கொடுத்தீர்கள். அங்கு நான் பலவற்றைக் கற்றுக்கொண்டேன்.

    ஆனால் உங்கள் முகத்தைப் பார்க்காமல் செல்கிறேன். அதற்காக என்னை மன்னியுங்கள். குழந்தை இல்லாத உங்கள் வீட்டில் நீங்கள் என்னை கவனித்த விதத்தை எப்போதும் நான் மறக்க மாட்டேன். 

    என் இளம் வயதில் நான் தேர்ந்தெடுத்த வழி என் வாழ்நாளை அப்படியே புரட்டிப் போட்டது. தெய்வமே வருவது போலதான் நீங்கள் வந்தீர்கள்.

   உங்கள் குடும்பத்தில் நானும் ஒருத்தியானேன். நீங்கள் என்னை முழுமையாக நம்பினீர்கள். அது எப்படி அக்கா உங்களால் முடிந்தது. அதற்கு நான் தகுதியானவள் தானா.? ஆனால் நீங்கள் வைத்த அந்த நம்பிக்கைதான் என்மீது எனக்கே ஒரு மரியாதையைக் கொடுத்தது.

    என் வாழ்நாள் முழுக்க நான் உங்களுக்கு நன்றியோடு இருப்பேன். அந்த நன்றியை நான்  சுமந்தப்படியேதான் போகிறேன். போகத்தான் வேண்டும். 

   கடைசியாக உங்களிடம் கேட்டுக் கொள்வது ஒன்றே ஒன்றுதான்; அக்கா உங்கள் கணவரையும் கவனித்துக் கொள்ளுங்கள். 

#தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்