பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

டிசம்பர் 27, 2025

- முன்மாதிரியும் பின்மாதிரியும் -

நாம் யாரை பின்தொடர்கின்றோமோ அவர்களுக்கு சாதகமான எல்லாவற்றையும் செய்து நல்லப்பெயரை வாங்குவதைவிடவும்
முக்கியமான ஒன்று உள்ளது.

அவர்கள் சொல்வதைவிட, செய்வதை கவனிப்பது. அவர்கள் செய்வதை நாமும் செய்வது.
அப்படி அதை நாம் செய்யும் போது அவர்களுக்கு எரிச்சல் வந்தால் அவர்களை பின்தொடர்வதை நாம் மறுபரிசீலனைச் செய்யவேண்டும்.

அவர்கள் சொல்வதை அவர்களே செயல்படுத்தாமல் முரணாக இருந்து கொண்டு காலம் தன்னை இழுத்துவிட்டு கோலம் போட்டுவிட்டதாக சொல்கிறவர்கள்
சொல்லட்டும். நம்மால் அதை புரிந்து கொள்ள முடிகிறது. ஒருவகையில் காலம் பலவற்றை ஆரோக்கியமாக மாற்றிவிடத்தான் செய்கிறது. வரவேற்போம்.

ஆனால் அதே காலம் நமக்கு வரும்போது அவர்கள் அதனை எப்படி எதிர்கொள்கிறார்கள். ஏன் நம்மை எதிரியாகப் பார்க்க ஆரம்பிக்கின்றார்கள், என கேட்க தொடங்காதவரை நமக்கு எதுஎதுவு மாறப்போவதில்லை.

அவர்கள் சொல்வதை அவர்களே பின்பற்றாத போதும் நாம் அவர்களையே முன்மாதிரி கொண்டு பின்மாதிரி! ஆக விரும்பினாலும் நண்பர்களே உண்மையில் அவர்களைவிடவும் நாம்தான் ஆபத்தானவர்கள்.

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்