பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

செப்டம்பர் 30, 2011

தண்ணீர் தேசம்




(29-09-2011 )
கண்ணதாசனின் 'சுருதி சேரதாக ராகங்கள்' படித்து முடித்துவிட்டேன். அது குறித்து பகிர்ந்தும் விட்டேன் என் வலைத்தளத்தில். அடுத்ததாக வைரமுத்துவின் 'தண்ணீர் தேசம்' புத்தகத்தை எடுத்திருக்கிறேன். 8/11/2009-ல் வாங்கிய புத்தகம் இன்று காலைதான் அலமாரியில் இருந்து எடுத்திருக்கிறேன். தமிழில் ஒரு விஞ்ஞானக் காவியம் என சொல்லப்படும் புத்தகம் இது. வைரமுத்துவின் ஆரம்பகால படைப்புகள் கவனிக்கத்தக்க ஒன்று. 1996-ல் இந்த புத்தகத்தின் முதற்பதிப்பைச் செய்திருக்கிறார்கள்.
படித்ததும் இப்புத்தகம் குறித்து பகிர்கின்றேன்.....
இப்படிக்கு தயாஜி







படித்தப் பிறகு பார்வை


4.10.2011 பின்னிரவு மணி 12.30.

"தண்ணீர் தேசம்" தன்னைத்தானே தமிழில் ஒரு விஞ்ஞானக் காவியம் என்று சொல்லும் புத்தகம்....!! இதனைப் படித்துவிட்டேன். இது குறித்து என்ன சொல்வது............. முகநூலில் இப்புத்தகம் குறித்து நான் எழுதியதையும் நண்பர்களுடன் பேசியதையும் கொடுப்பதே போதும் என நினைக்கிறேன்.

நண்பர்களுடன் ஏற்பட்ட உரையாடலில் சில………….

Tharmarajan Gunasekaran
படித்துப் பாருங்கள். அருமையாக இருக்கும்.
தமிழ் ரோஜா & கலைவண்ணன் காதலும், சலீம், இசக்கி, பாண்டி இவர்களின் பாத்திரப் படைப்பும் படிப்பதற்கு ஆர்வமூட்டும்.

Tayag Vellairoja
பாதி படித்துவிட்டேன்........... நண்பர்கள் நீங்கள் எதிர்ப்பார்த்ததுபோல் அது குறித்து எழுத மாட்டேன்....
Tharmarajan Gunasekaran நண்பா.... எல்லோர்க்கும் அருமையாக இருக்கும் என்பதிற்கில்லை சிலருக்கு அறுவையாகவும் இருக்கலாம்... தமிழில் ஒரு விஞ்ஞானக் காவியம் என சொல்லியிருக்கின்றார் அதன் படைப்பாளர். வெறும் புள்ளிவிபரங்களை உரையாடலின் ஊடே சொல்லிவிட்டால் விஞ்ஞானக் காவியம் ஆகிவிடுமா….?

ஸ்ரீவிஜி விஜயா
இந்த புத்தகத்தை கதைக்காக படித்தால் தலை வலிக்கும்.. தமிழை சுவைப்பதற்காகப் படித்தால், ரசிப்பீர்கள்.சிறிய சிறிய தகவல்கள் கண்களை அகல விரியவைக்கும்..சுவாரிஸ்யம்

Tayag Vellairoja
உண்மைதான் அக்கா... விஞ்ஞானக் காவியம் என சொல்லி.......... தகவல்களை கொடுத்திருக்கின்றார்.......

வட்டாரக் கல்வி வேறு; அறிவியல் வேறு...............

ஸ்ரீவிஜி விஜயா ‎
:)))))))))) there u r.

Tayag Vellairoja

நன்றி அக்கா...... படித்த பிறகு என் பார்வை என்ன என்பதனை இப்படித்தான் எழுதப்போகிறேன்.... வெறுமனே வைரமுத்துவைக் காப்பாற்ற நினைக்காமல்.......... அவரை ஒதுக்கிவைத்து விட்டு... விஞ்ஞானக் காவியம் என சுயவிளம்பரம் செய்யும் இந்த தன்முனைப்பு படைப்பாகவே இந்த தண்ணீர் தேசத்தைப் பார்க்கிறேன்.
இதில் விஞ்ஞானத்தை விடவும் தகவல்கள் அதிகம், தகவல்களை விடவும், தன்முனைப்பு வாக்கியங்கள் அதிகம் , தன்முனைப்பு வாக்கியங்களை விடவும் பாடல் வரிகளும் கவிதை நயங்களும் அதிகம்….
இதை எழுதியவர் வைரமுத்து என்பதை கொஞ்ச நேரம் ஒதுக்கி வைத்து அல்லது மறந்து உண்மையான வாசிப்பை இந்த படைப்பின் மீது செலுத்தினால் மேற்சொன்னதுதான் பதிலாக கிடைக்கிறது…..


ஸ்ரீவிஜி விஜயா

உங்கள் பார்வை எதார்த்தம்.வாழ்த்துகள். நான் மேலோட்டமாகத்தான் தம்பி.. எனக்குப் புரிய கஷ்டமாக இருந்தது


Tayag Vellairoja
நன்றி அக்கா.... நீங்கள் எதார்த்தம் என்கிறீர்கள் சிலர் "நீ என்ன வைரமுத்துவை விட பெரியவன்ன்னு நினைப்பான்னு" கேள்வி கேட்கறாங்க.....:) பாவம் அவர்களின் மைல்கல் அவ்வளவுதான்...

ஸ்ரீவிஜி விஜயா
சும்மானாலும் கிளப்பி விடுவார்கள்... உங்க பாணியிலே தொடருங்கள். உங்க வாசிப்புத் திறன்..பெருமைபட வைக்கிறது. இன்னுன் 20திலே இருக்கும் நீங்கள், எங்க வயதிற்கு (40+) எங்கியோ போயிடுவிங்க தம்பி. சிறந்த படைப்பாளியாவீர்கள்.. விழுந்து விழுந்து எழும் போது எழுத்தில் பக்குவம் வரும்..தொடருங்கள் உங்கள் பணியை உங்க பாணியிலே... வாழ்த்துக்கள்.

..............................................................................................................


ஒருவேளை இந்த தண்ணீர் தேசம் எழுதபட்ட ஆண்டுகளின் விஞ்ஞானக் காவியமாகத் தெரிந்திருக்கலாம்….. ஆனால் இப்போது படிக்கும் போது வெறும் புள்ளிவிபரங்களு தன்னம்பிக்கையும் தமிழின் அழகே தெரிகிறது……..
உங்களுக்கு என் கருத்தில் மாற்றுக் கருத்து இருக்கலாம்; சிலர்க்கு இருக்கும்;வாருங்கள் கருத்து பறிமாறுவோம் ஆனால் படித்து முடித்த பிறகே முன்வாருங்கள்; உங்கள் விஞ்ஞான எதிர்ப்பார்பையும் தண்ணீர் தேசம் ஏமாற்றும்…………..

இப்படிக்கு தயாஜி………

2 comments:

பெயரில்லா சொன்னது…

முற்றிலும் உண்மை நண்பா... ஆனாலும் ஒரு நல்ல முயற்சி... வரவேற்போம் :)

தயாஜி சொன்னது…

நல்ல முயற்சிதான் ஆனால் இதுதான் முடிவு என்று சொல்லாதவரைக்கும்; ஒவ்வொரு முயற்சிக்கும் வரவேற்பு உண்டு.....

இதன் வழி உங்களைப் பற்றி அறியவந்ததில் மகிழ்ச்சி......

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்