பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பிப்ரவரி 23, 2022

- அம்மா வருவேன் -


"அம்மா.... என்னை மன்னிச்சிடுங்கமா..."
"ஏன்யா... மன்னிப்பெல்லாம் கேட்கற.. உனக்கு ஒன்னும் ஆகாதுயா..."

"நீங்க ரொம்ப பாவம். இப்படி ஓர் அம்மாவை நான் பாக்கல... ஆனா நீங்க எனக்காக எல்லாமே செய்றீங்க... என்னால உங்களுக்கு ஒன்னுமே செய்ய முடியலம்மா..."
"பெத்த பிள்ளைக்கு செய்யாத அம்மா எங்கயா இருக்காங்க.. உனக்கு ஒன்னும் ஆகாது.. அம்மா இருக்கேன்.. உனக்கு ஒன்னுமில்ல.. நீ நல்லாய்டுவ.... மறுபடியும் அம்மாகூட கடைக்கு வருவ.. பேசுவ.. சமைக்க உதவி செய்வ.. சண்டை போடுவ.. விளையாடுவ..."

"அம்மா ரொம்ப வலிக்குதுமா...."
"கொஞ்சம் பொறுத்துக்கய்யா... இப்பதான் மருந்து சாப்டிருக்க கொஞ்ச நேரத்துல சரியாகிடும்.. ஆம்பிலன்ஸும் வந்துகிட்டு இருக்கு...."

"மா.. நீங்க போய் தூங்குங்க.. என் கூடயே இருக்கீங்க... சரியா தூங்கியே ரொம்ப நாள் ஆச்சிமா...."
"தூக்கமாய்யா முக்கியம்... உன்னையை இப்படி விட்டுட்டு அம்மாவால எப்படியா நிம்மதியா தூங்க முடியும்..."

"நானே உன் நிம்மதியைக் கெடுத்துட்டேன் மா... மன்னிச்சிடும்மா..."
"அப்படிலாம் பேசாதப்பா..."

"வலிக்குதும்மா...ரொம்ப வலிக்குதும்மா..."
"அம்மா மடில படித்துக்கப்பா.. எல்லாம் சரியாகிடும்... ஆம்பிலன்ஸும் வந்துகிட்டு இருக்கு...."

"ம்மா....ம்மா...."
"அம்மா இருக்கேன்.. உனக்கு ஒன்னும் ஆகாது.... "

"ம்மா....."
"தோ ஆம்புலன்ஸ் வந்துடிச்சி...."

ஆம்புலன்ஸ் வந்துவிட்டது. அவசரமாக இறங்கியவர்கள் கூடியிருந்த உறவினர்களை நகரச்சொன்னார்கள். பாதி மயக்கத்தில் இருந்தவனை கட்டிலில் தூக்கி வைத்தார்கள். அம்மா வாசலுக்கு சென்றுவிட்டார்.

அவர்கள் அவனை கட்டிலில் வைத்து வெளியே கொண்டு வந்துகொண்டிருக்கிறார்கள். வாசலில் நின்றிருந்த அம்மாவின் வெண்புகையை ஊடுருவி அவன் கட்டிலில் கடந்து சென்றுக்கொண்டிருக்கிறான்.

"ம்ம்மா...மா..." முனகினான்.

"உனக்கு ஒன்னும் ஆகாதுயா.. நீ எப்ப கூப்டாலும் அம்மா வருவேன்.... உனக்கு ஒன்னும் ஆகாது...."

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்