பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பிப்ரவரி 11, 2022

- தவறவிடக் கூடாதக் குறுங்கதை -

நீங்கள் வாசித்து விட்டீர்களா?. நான் வாசித்த குறுங்கதையிலேயே மிக முக்கியமானது அதுதான். கதையல்ல அது ஒரு காவியம். என்ன ஒரு வார்த்தை வருணனை. எப்படியானக் கற்பனைத்திறன். எல்லையற்றக் கற்பனை எதுவரையும் செல்லும் என எடுத்துக்காட்டும் கதை.

ஆயுள் ரேகையைவிட அறிவு ரேகை அழுத்தமாக இருப்பவரால்தான் இப்படியொன்றை எழுத முடியும். அந்தக் கதையின் தொடக்கமே வித்தியாசமாக இருந்தது. கதைப்போக்கு "ஆஹா.. ஓஹோ..' என சொல்லும்படி இருக்கும். இல்லையில்லை சொல்லியே ஆகவேண்டும் என்றபடி இருக்கும். ஒரு பக்கத்தில் ஓராயிரம் செய்திகளை சுமந்திருக்கும் கதை.

தனித்தன்மையுள்ள ஒருவரால்தான் இப்படியானக் கதையை எழுதியிருக்க முடியும். ஏதோ வாசிக்கலாம் எனதான் ஆரம்பித்தேன். யார் யாரோ குறுங்கதைகள் எழுதுகிறார்கள்தான் ஆனால் இந்தக் கதை அதன் வடிவத்திற்கே சவால்விடும் கதை. இக்கதை ஒரு முன்மாதிரியானக் கதை. 

இது கதையல்ல காவியமென ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டாலும், இப்போதும் சொல்லலாம். அதில் யாரும் குற்றம் காண முடியாது. 

இன்னும் படிக்கவில்லையா. என்ன சொல்கிறீர்கள். எப்படி அதியர்ப்புதக் கதையைத் தவற விட்டீர்கள். சரி விடுங்கள்.

அது போனவாரம் நான் எழுதிய குறுங்கதைதான். இனி நீங்களே வாசித்துப் பார்த்து சொல்லுங்கள்...

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்