பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பிப்ரவரி 13, 2022

- தனிமையிலே இனிமை காண... -

யாரும் என்னை கேள்வி கேட்க முடியாது. தோள் மீது கையைப் போட்டு எனக்கு அறிவிரையும் கூற முடியாது. அப்படியாக யாரையும் நான் விரும்பவில்லை. யாருக்கும் நான் அப்படியிருக்க விருப்பமில்லை. 

தனிமையைக் கொண்டாடும் மனம் எனக்கு. மற்றவர்களின் துணை எதற்கு. நான் தனிக்காட்டு ராஜா. சம்பாதிக்கிறேன் செலவு செய்கிறேன். கொண்டாடுகிறேன்.
எனக்கு என்ன தேவையோ அதை நானே முடிவெடுக்கிறேன். நானே செயல்படுத்துகிறேன்.

யாரும் என்னிடம் வந்து எதும் பேசவில்லை. யாருடனும் நான் இல்லை. நம்மை தாண்டி மற்ற யாராலும் நம்மை புரிந்துகொள்ள முடியாது. இன்னொருவர் என்ன செய்ய வேண்டும் எப்படி செய்ய வேண்டும் என நான் தலையிடுவதில்லை. அதே போல் என்னிடமும் யாரும் தலையிட நான் அனுமதிக்கவில்லை.

தனிமை என்பது எத்துணை இன்பமானது. இதனை அணு அணுவாக ரசித்து வாழ்பவன் நான். வாழ்ந்தவன் நான்.

ஆனால் தனிமை என்பது எல்லா சமயமும் இனிமையைக் கொடுப்பதில்லை என்பதை அறிந்துகொண்டிருப்பவனும் நானே.

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்