பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூன் 17, 2020

பேயாவது பிசாசாவது...


   முதலில் பயம் இருந்தது. இப்போது இல்லை. முழு வீடியோ காட்சியையும் பார்த்துவிட்டாள். பிறகு எதற்கு பயப்பட வேண்டும். 

   ராஜ் வாங்கிக் கொடுத்த கரடி பொம்மை அவ்வபோது நகர்ந்து அமர்ந்து மாயாவிற்கு பயத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது. ஒரு முறை பார்த்தால் ஒரு வாக்கிலும் ஒன்னொரு முறை பார்த்தால் இன்னொரு வாக்கிலும் நகர்ந்திருக்கிறது. அது பற்றி சொன்னாள், ராஜ் நம்பவில்லை. "பேயாவது பிசாசாவது.." என சிரிக்கவும் செய்தான்.

   நகர்ந்து அமரும் கரடியை நிரூபிக்க ஒரு ஏற்பாடு செய்தாள். கரடி பொம்மையைப் பார்த்த வாக்கில் கைபேசி கேமராவை மறைவாக வைத்தாள். குளித்தாள். 

   வெளியில் வந்துப் பார்த்தாள். கரடி பொம்மையின் கை வேறு பக்கமாக இருந்தது. பயந்தவாக்கிலேயே கைபேசியை எடுத்து வெளியே வந்தாள்.

   அவள் குளித்துக் கொண்டிருந்த சமயம், ராஜ் மெல்ல உள்ளே வந்து கரடியின் கையை வேறு பக்கம் வைக்கிறான். எல்லாமே பதிவாகியிருந்தது.

   மாயாவிற்கு பயம் மறைந்து ராஜ் மீது கோவம் வந்தது. காதலியுடன் இப்படியா பயம் காட்டி விளையாடுவது. அதனால்தான் ஏனோ அவள் சொல்வதை அவன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. எங்கே மறைந்திருக்கிறான் என வீட்டின் ஒவ்வொரு அறையாக தேட ஆரம்பித்தாள்.

   யாரோ வாசல் கதவை பலமாக தட்டுகிறார்கள். யாராக இருக்கும் என கதவை பாதி திறந்து பார்க்கிறாள்.

    "வீட்டு சாவியை மறந்துட்டேன்... உனக்கு போன் பண்ண கிடைக்கல... கதவை திற..." என்று ராஜ் நின்றுக்கொண்டிருந்தான்.

   கதவை முழுதாகத் திறப்பதற்கு முன் ஏனோ திரும்பி பார்க்கிறாள். 

   அவளது அறையில் இருந்து அந்த கரடி பொம்மை சுவரில் மறைந்து பாதி முகத்தில் அவளைப் பார்த்து கொண்டுருக்கிறது.

#தயாஜி

2 comments:

Unknown சொன்னது…

Wow semme.... arumaiyana karpanai valam
Ashok

தயாஜி சொன்னது…

நன்றி அண்ணா...

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்