பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூன் 16, 2020

உரையாடல்


   வீட்டிற்கு வந்தாள். கைபேசியை எடுத்து வைத்தாள். கையில் கொண்டு வந்திருந்த எதையோ மேஜையில் வைத்தாள். நாற்காலியில் அமர்ந்திருப்பவனுக்கு எதும் எந்த சலனத்தையும் கொடுக்கவில்லை. கைபேசியில் வேகவேகமாக எதையோ எழுதிக் கொண்டும் சத்தமின்றி சிரித்துக் கொண்டுமிருந்தான்.

 அவளும் அவனை சட்டை செய்யவில்லை. குளித்தாள். சாப்பிட்டாள். காலையில் சமைப்பதற்கான எல்லாவற்றையும் தயார் செய்தாள். துணிகளை துவைக்கப்போட்டாள். நேற்று காயப்போட்ட துணிகளை எடுத்தாள். மடித்தாள். அடுக்கினாள். இத்தனை நடந்தும் எந்த சத்தமும் வரவில்லை.

  அவ்வீடு முழுக்கவும் மௌனமே சூழ்ந்திருந்தது. அவளிடம் மட்டுமல்ல அவனிடமும். அப்போதுதான் அவனது கைபேசி அதிர்ந்தது.  எடுத்தான். பால்கணிக்கு சென்றான். மெல்லிய குரலில் பேசவும் செய்தான். பேசுவதற்கே காத்திருந்தவன் போல அவனது கண்களில் ஒளி தெரிந்தது. 

  அது கூட அவளுக்கு வாய்ப்பதில்லை. வீட்டிற்கு வந்ததும் அவள் செய்யும் முதல் வேலை கைபேசியை முடக்குவதுதான்.

   அமைதியின் இரைச்சலுக்கு மத்தியில் இருவரும் பேசி வந்த வார்த்தைகள் மெல்ல மெல்ல ஒலி மங்கி இப்போது இல்லாமலேயே போய்விட்டது. எண்களின் வரிசை போல ஒரு மாறாத வரிசையில் சிக்குண்டவர்கள் போல வீட்டில் அவர்கள் சிக்கிக்கொண்டார்கள்.

   நள்ளிரவில் திடுக்கிட்டு எழுந்தாள். முன்பு மேஜையில் வைத்த எதையோ எடுத்துப் பார்த்தார்.

 'கால் செண்டரில்' அதிக வாடிக்கையாளர்களிடம் பேசியதற்கும், இலக்கை அடைந்ததற்காகவும் உள்ள பரிசு,  மூன்றாவது முறையாக அவளுக்குக் கிடைத்திருக்கிறது.

#தயாஜி

Related Posts:

  • முகமற்றவன் பதவியுற்றவன் அடையாளம் தெரிந்த வார்த்தைள் சேர்ந்து அடித்து உதைக்கின்றன.... வலியை பொருக்க முடியவில்லை கேள்விக்கு மேல் கேள்விகள் கேட்க கேட்க வெட்… Read More
  • கோப்பை தேநீருடன் ஓர் ஒப்பந்தம் எச்சரிக்கைகள் வேண்டுகோல்கள் கேள்விகள் விருப்பங்கள் ஆசைகள் எல்லாம் எதிரே கை கூப்புகின்றன என் தியானத்தை நிறுத்த.... சாத்த… Read More
  • கொடுத்தால் போதும் ! ; கொடுத்ததே போதும் !     ‎59-வது வயதில்அடையாள அட்டைகிடைத்ததாம்மகிழ்ச்சி, பாராட்டு, ... பூரிப்பு, ஆதரவு, அக்கறை, கவனிப்பு, பாசம்என்றஅடுக்கள்கள் தொடர்கின… Read More
  • இப்பொழுது வாசிப்பில் (13.2.2012) தற்போது படிக்கத் தொடங்கியிருப்பது 'புதிய காலம் - சில சமகால எழுத்தாளர்கள்'. எழுத்து ஜெயமோகன். நண்பர் நவின் முன்மொழிந்திருந்த மிக முக்… Read More
  • திரைப்பார்வை - மெரினா மெரினா - படம் பார்த்தேன். கண்டுவந்த கடற்கரையில் கவனிக்காத மனிதர்களின் கதையும் கதை சார்ந்த உணர்வும் அதன் ஊடே கல்வியில் முக்கியத்துவமும் சேர்ந… Read More

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்