பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூன் 29, 2012

நான் எனும் அடையாளம்





காப்பாற்றுங்கள்
கனவுகள் என்னை
துரத்துகின்றன
ஒழிந்துக்கொள்ள
உறங்க வேண்டும் நான்......

...............................................................................

அந்த எழுத்தாளனுக்கு
எல்லா உறவுகளும்
எல்லா உணர்வுகளும்
கதைகளாகவே இருக்கின்றன;
அதனால்தான்
அவன் எழுகிறான்
உடன் அழுகிறான்;
தொடர்ந்து எழுதுகிறான்.

...........................................................................



 நடந்த ஒன்றிற்கும்
நடக்காத ஒன்றிற்கும்
நடக்கவேண்டிய ஒன்றுக்கும்
நடக்கக்கூடாத ஒன்றுக்கும்
நானும் நீயும்
சொல்லாலும் செயலாலும்
காய்களை நகர்த்திக் கொண்டே இருக்கிறோம்
சதுரங்கம் கண்மூடும் ஒவ்வொரு கணமும்......

2 comments:

அனைவருக்கும் அன்பு  சொன்னது…

அருமையான உணர்வுகளின் பிம்பம்

தயாஜி சொன்னது…

நன்றி தோழி.....

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்