பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

செப்டம்பர் 05, 2024

சுயம்புலிங்கத்தின் 'ஒரு திருணையின் பூர்வீகம்'

 தினம் ஒரு கதை 5/30


சில கதைகளை வாசிக்க வாசிக்க அக்கதையின் ஆதாரக் குரல் நமக்கு கேட்க நேரிடும். பெரிய நாவல்களுக்கு இதனை நாம் பொருத்திப் பார்க்கலாம். அதனால்தான் நாவலின் கதாப்பாத்திரங்களோடு நான் நெருங்கிவிடுகிறோம். அவர்களுக்காக கண்ணீரும் வடிக்கின்றோம். நாவலில் நமக்கு கேட்ட கதாப்பாத்திரத்தின் குரல் மெல்ல மெல்ல உருமாறி நம்மையே பிரதியெடுத்து நம்மோடு உரையாடவும் செய்கிறது.

நாவல்களுக்கு மட்டுமே இது சாத்தியம் என்ற எண்ணத்தை இந்த ஒரு பக்கக் கதை உடைத்தது. ஒரே பக்கம்தானே என வாசிக்க தொடங்கினால் முதல் பத்தியிலேயே நம்மை உள்ளே இழுத்துவிடுகிறது. அடுத்த பத்தியில் நம்மோடு பேசத்தொடங்கி, கதையை வாசித்து முடிந்ததும் நம்முடைய குரலிலேயே இதுவரையில் நாம் இழந்துவிட்டதை நாம் கேட்கவும் செய்கிறோம்.

திண்ணையை வட்டார வழக்கில் திருணை எனவும் அழைக்கிறார்கள். அது வெறும் திண்ணை மட்டுமல்ல ஒவ்வொரு வீட்டிலும் இன்னொரு மனிதனாகவே பார்க்கப்படுகிறது. நமது வாழ்வியலில் பிற உயிர்களிடத்தில் மட்டுமல்ல உயிரற்ற எதனிலும் நாம் அன்பு பாராட்ட தவறியதே இல்லை என காட்டும் சிறுகதை.

உண்மையிலேயே சிறிய கதைதான் ஆனால், அது சுமந்திருக்கும் செய்தி பல ஏடுகளில் நம்மில் எழுதிச்செல்கிறது.

கதையின் கடைசி வரிக்காக நானும் நம்பிக்கை கொள்கிறேன். குறைந்தபட்சம் இவர்களாவது அதனை பயன்படுத்தட்டும்.

#தினம்_ஒரு_கதை #தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்