பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

செப்டம்பர் 11, 2024

இமையத்தின் 'பெத்தவன்'

 தினம் ஒரு கதை 11/30

  சிறுகதை என்ற அடையாளத்துடன் நான் வாசித்த அதிக பக்கங்கள் உள்ள கதைகளில் இப்போதும் மனதில் நிற்கும் கதைகளில் ஒன்று. பிறகுதான் சிறுகதைக்கும் நெடுங்கதைக்குமான தேவையைப் புரிந்து கொண்டேன்.

   மாத இதழொன்றில்தான் இக்கதையை முதலில் வாசித்தேன். அப்போது, 'பெத்தவனை' வாசிக்க ஒரு வாரம் எடுத்துக்கொண்டேன். வழக்கமாக சிறுகதைகளை ஒரே நாளில் வாசித்து முடிக்கும் எனக்கு இதுவே ஆச்சர்யத்தைக் கொடுத்தது.

  வாசித்ததையே திரும்பத் திரும்ப வாசித்துள்ளேன். முடிவை நெருங்க நெருங்க பதற்றத்தில் சிறுகதையை அப்படியே முடிவைத்துவிட்டு வேறு இடத்திற்கு சென்றுவிடுவேன். என்னால் அவ்வளவு எளிதாக அந்த முடிவை நெருங்க முடியவில்லை. ஆனால் இப்போதைய மனநிலை அவ்வாறு இருக்கவில்லை.

   சாதிய வன்முறையை பல படைப்பாளிகள் தன் எழுத்துகளில் சொல்லியுள்ளார்கள். ஆனால் பெத்தவன் அதிலிருந்து மாறுபட்ட ஒன்றாகவே உணர்கிறேன். ஜாதிய விஷத்தால் வளர்ந்து நிற்கும் சமூகத்தில் எப்படி ஒரு காதல் பிழைக்கிறது என இக்கதையைப் புரிந்து கொள்ள முடியவில்லை. 

   தன்னை சுற்றி பலம்கொண்டு எழுந்து நிற்கும் ஜாதிய மனோபாவத்தை, அந்தச் சமூகத்தை ஒரு தந்தை எப்படி எதிர்க்கொள்கிறார் என இமையம் சொல்லும் இடம் நம்முடைய மனதையும் கலங்கடிக்கும்.

  எதிர்ப்பாராத முடிவென்றாலும் இனியும் இப்படியான முடிவுகளுக்கு மனிதர்கள் தள்ளப்படக்கூடாது என்றே நினைத்தொன்றும். நீங்களும் வாசித்துப் பாருங்களேன்.


Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்