பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

செப்டம்பர் 04, 2024

ந.பிச்சமூர்த்தியின் 'ஞானப்பால்'

 💙தினம் ஒரு கதை 4/30💙

 இங்கு எது தேடப்படுகிறதோ அதை தேடுபவர்களே அதனை நெருங்கிட முடியாதபடிக்கான செயல்களை தன்னையறியாது செய்துவிடுகிறார்கள். 

'மாங்காய்ப் பாலுண்டு

மலைமேலிருப்போர்க்குத்

தேங்காய்ப்பால் ஏதுக்கடீ குதம்பாய்'.

 என்னும் குதம்பைச் சித்தர் பாடலை இச்சிறுகதையில் சரியான இடத்தில் ந.பிச்சமூர்த்தி  பயன்படுத்தியிருப்பார்.

 மாங்காய்ப்பாலை குண்டலினி சக்தியென்றும் தேங்காய்ப்பாலை சிற்றின்பம் அல்லது உலக வாழ்க்கை மீதான பற்றாக நாம் பாவித்தால் இச்சிறுகதையில் சொல்லப்படும் ஞானப்பால் எதுவென்று புரியும்.

 எதற்கும் ஒரு விலை கொடுக்கத்தான் வேண்டியுள்ளது. ஆனால் கொடுக்கும் விலையை விடவும் கிடைக்கும்  விளைவு  பெரிதாக இருந்தால் யாருக்குத்தான் ஆகாது. அதே சமயம் உடனடியாக புலப்படாத விளைவு எவ்வளவு உன்னதமாக இருந்தாலும் கண்ணுக்கு தெரிந்த விலையை அவ்வளவு சுலபமாகக்  கொடுக்கத்தான் முடிகிறதா?

 இச்சிறுகதையை வாசித்து முடித்ததும், நாயகன் லிங்ககட்டிக்கு ஞானம் கிடைத்ததா இல்லையா என்ற கேள்வியோடு நாம் அடையவேண்டிய ஞானம் என்ன என்கிற கேள்வியையும் நமக்குள் எழ செய்கிறது.

அதற்காகவாவது 'ஞானப்பாலை' ஒருமுறை வாசித்துவிடுங்கள்.



Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்