பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

செப்டம்பர் 10, 2024

சுஜாதாவின் 'நகரம்'

 தினம் ஒரு கதை 10/30

எனக்கு வாசிப்பின் மீது அதிகம் ஆர்வம் வந்ததற்கு சுஜாதாவின் எழுத்துகளும் ஒரு காரணம். அவரின் எழுத்து நடை நம் வாசிப்பின் வேகத்தை அதிகப்படுத்திடவும் செய்யும்.

நாம் வாழ்த்து கொண்டிருப்பது நகரமா? நரகமா ? என சொல்லும் கதைகளில் இந்தக் கதைக்கும் இடம் உண்டு.

முழு மருத்துவமனையையும் சொல்லிவிட்டாரோ என தோன்றும்படி கதையை எழுதியிருப்பார். அவ்வளவு விவரங்கள் கதைகளில் இடம்பெற்றுக்கொண்டே இருக்கும். இப்போது வாசிக்க சில இடங்கள் அவசியமில்லை என தோன்றினாலும்  கதையின் முடிவு எல்லாவற்றையும் மறக்க வைக்கிறது.

என்ன நோயென்று தெரியாமல் தன்  மகளை மருத்துவமனைக்கு அழைத்து வரும் வள்ளியம்மாள், அது என்ன நோய் என்று தெரியாமலேயே அங்கிருந்து வெளியேறுகிறார்.

நம்பிக்கை எந்த இடத்தில் மூடநம்பிக்கையாக மாறுகின்றது என 'நகரத்தில்' சுஜாதா சொல்லியிருந்தாலும் அந்த நம்பிக்கை காப்பாற்றப்படவேண்டுமென  வாசகர்களையும் பிரார்த்திக்க வைக்கிறார். 


Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்