பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜனவரி 24, 2025

- பாவச்சுழல் -

 


தன்னைத்தானே 

தண்டிக்கும்

கண்ணீரில் கரையும்

கழுவேற்றிக்கொள்ளும்

மனிதனை

எல்லோருமே விரும்புகிறார்கள்


மன்னிப்பதை போல

அதில் 

எந்தவித சிரமமும் 

எந்தவொரு வருத்தமும்

எப்படியான துக்கமும்

குற்றவுணர்ச்சியும்

அவர்களுக்கில்லை


ஆகவே


தன்னைத்தானே 

தண்டிக்கும்

கண்ணீரில் கரையும்

கழுவேற்றிக்கொள்ளும்

மனிதனை எல்லோருமே

விரும்புகிறார்கள்


Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்