பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

மார்ச் 24, 2022

- விலை -

"ஒரு பத்து வருஷம் இருக்குமா?" எனதான் அந்த உரையாடல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இருவரின் காபியும் முடிந்துவிட்டது. சாப்பிட்டத் தட்டில் மட்டும் சிதறிய தின்பண்டங்கள் கிடந்தன. இனி அதை இவர்கள் சாப்பிடப்போவதில்லை.

"ஆமா இருக்கும்...." என்று ஆமோதித்தான் சுகுமாறன். அடுத்ததாக நண்பன் என்ன கேட்கப் போகிறான் என்று சுகுமாறனுக்கு தெரிந்தது. அதற்குள் கிளம்பிவிட வேண்டும். முயன்றான். முடியவில்லை.

"சரி என்ன சம்பளம் எடுக்கற எங்கதான் வேலை செய்யற... என்ன சட்டை இது... கைகடிகாரம் என்ன ப்ராண்டுன்னே தெரியல...."

"அது....."

"என்னோட வாட்ச் மட்டும் எட்டாயிரம் வெள்ளி.... மத்த விலையெல்லாம் சொன்னேனு வாசிக்கோ.. மயக்கமே போட்டுடுவ..." சொல்லிய நண்பன் மற்றதின் விலைகளைச் சொல்ல ஆரம்பித்தான்.
இனியும் முடியாது என்றபடியால் சுகுமாறன்,
"நல்லாருக்கு.... சரி பா.. உன்னை பார்த்ததில் சந்தோஷம்... நான் கிளம்பறேன்.."

"என்ன அவசரம்.. இரு.. டைம் இருக்கு... மெதுவா போகலாம்... " என்று அடுத்தச் சுற்றுக்கு என்ன சாப்பிடலாம் என மெனு புத்தகத்தைப் பார்க்கலானான்.

"ஏன் பா... எவ்வளவோ சம்பதிக்கற.. எவ்வளவோ விலைக்கு கடிகாரம் சட்டை சப்பாத்து எல்லாம் வாங்கியிருக்கயே... வீட்டுல உனக்காக சமைச்சி காத்திருக்க ஒருத்தர் கூட இல்லையா....?

நண்பனுக்கு பகீரென்றது,

"அது...."

"சரிப்பா நீ இங்கயே டின்னரையும் முடிச்சிட்டு கிளம்பு.. நான் இப்ப கிளம்பறேன்... வீட்டுக்கு போய் ஒன்னா உட்கார்ந்து சாப்டாதான் மனசுக்கு திருப்தி....."

சுகுமாறன் கிளம்பினான். நண்பனுக்கு பசி மறந்து போனது. பல விடயங்கள் நினைவிற்கு வரத்தொடங்கின....


Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்