பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

மார்ச் 04, 2022

- தப்பித்தலும் காப்பாற்றுதலும் -

இப்போதுதான் சத்தம் அடங்கியது. காலையில் இருந்து துப்பாக்கி வெடிக்கும் சத்தங்கள், குண்டு வெடிப்பு சத்தங்கள், விமானங்களின் சத்தமென எங்களை பீதியாக்கிக் கொண்டிருந்தன. இது யுத்தகால ஓய்வு நேரம் போல, பெரியதொரு வெடி சத்தத்தைத் தொடர்ந்து மயான அமைதி நிலவிக்கொண்டிருக்கிறது.

யுத்தத்தின் சத்தத்தைவிட, அது தரும் திடீர் அமைதி அபாயமானது. உயிர் பயத்தை முழுமையாகக் காட்டக்கூடியது. ஓடும் திசை தெரியாமல் திக்கு முக்காட செய்வது. யாரெல்லாம் செத்துவிட்டார்கள் என காட்டிக்கொடுப்பது.

வெடிக்கும் சத்தத்தைவிடவும் அடுத்து எங்கே வெடிக்கும் என்கிற முன்னமைதி நிச்சயம் அபாயமானதுதான்.

என்னால் காப்பாற்ற முடிந்த மனைவியையும் பிள்ளையையும் இறுக்கப் பிடித்துக் கொண்டேன்.  வெளியில் எங்கும் செல்ல முடியாது. வாசலில் குவிந்து கிடக்கும் உறவினர்களின் சடலங்களை நாங்கள் மீண்டும் பார்க்க முடியாது.

பக்கத்துவிட்டு பையன் ஒருவன். அடைக்கலம் தேடி வந்தான். அவனைக் காணவில்லை. அவன் வீட்டார் வந்து கேட்டால் என்ன பதில் சொல்லட்டும். சொல்ல முடியும்.

என் மகளைக் காப்பாற்ற முடிந்த என்னால் ஏன் அந்தப் பையனைக் காப்பாற்ற முடியவில்லை. என் மனைவியைப் பாதுகாத்த என்னால் ஏன் உறவினர்களை பத்திரமாக இடம் மாற்ற முடியவில்லை. நான் முயலவில்லையா. இயலாமையா. சுயநலமா. நானும் மனிதன் தானா.....

அதோ மீண்டும் குண்டு வெடிக்கும் சத்தம் கேட்கிறது. யுத்தம் தொடங்கிவிட்டது.
இனி மனசாட்சியின் குரலுக்கு மதிப்பில்லை. அதற்கான பதிலும் தேவையில்லை. எப்படியாவது என்  மனைவியையும் என் மகளையும் காப்பாற்ற வேண்டும். அதற்கு நான் ஏதும் செய்ய வேண்டும்...


Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்