பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூன் 14, 2022

அதனால் என்ன...?



கடற்கன்னியை நீங்கள் பார்த்தது உண்டா?. ரொம்பவும் அழகாக இருக்கும். பார்ப்பது அவ்வளவு எளிதல்ல. பார்த்துவிட்டால் மறப்பதற்கு வாய்ப்பே இல்லை. 

கடற்கன்னியை நீங்கள் பார்த்தது உண்டா?. அவளின் கண்களையாவது நீங்கள் பார்க்க வேண்டும். பால் வண்ண வானத்தில் ஓர் வண்ண ஊதா பொட்டு போல இருக்கும். அவளை நேராகப் பார்க்கும் போது ஐந்து நிமிடங்களுக்கு மேல் அவளது கண்களைப் பார்க்காதீர்கள். பின் வேறெப்போதும் அங்கிருந்து உங்களால் மீள முடியாது.

கடற்கன்னியை நீங்கள் பார்த்தது உண்டா?. சில சமயங்களில் வருடத்தின் மூன்றாம் பௌர்ணமியில் பார்க்கலாம். நள்ளிரவு நிலவு முழுமையாய் ஒளி வீசும் போது, கடலின் வடக்கு திசை நோக்கி பார்க்க வேண்டும். உலகைக் காண்பதற்கு தயாரான ஏதாவது ஒரு கடற்கன்னி அப்போதுதான் தலை காட்டுவாள். மிகச்சரியாக பத்து நிமிடங்களே அவளுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதற்குள் அவளைப் பார்த்துவிட வேண்டும்.

கடற்கன்னியை நீங்கள் பார்த்தது உண்டா?. சொல்ல மறந்துவிட்டேன். அவள் பார்க்காது நீங்கள் அவளைப் பார்க்க வேண்டும். தன்னைப் பார்க்காதவர் மீதுதான் அவளுக்கு ஈர்ப்பு ஏற்படும். அது அவள் மமதையை உசுப்பிவிடும். ஒரு முறையாவது தன்னை யாருக்கும் காட்டிவிடுதான் அவள் கடலுக்குள் நீந்துவாள். அதனை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். 

கடற்கன்னியை நீங்கள் பார்த்தது உண்டா?. பார்க்கவில்லையா?. நானும்தான் பார்க்கவில்லை. அதனாலென்ன....

#தயாஜி 
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை 
#வெள்ளைரோஜா_பதிப்பகம்

2 comments:

செந்தமிழோன் முபாசெல்வா24 சொன்னது…

வணக்கம் ஐயா. நான் பார்த்துள்ளேன்; பார்த்துவிட்டேன். என்னுள் நானாகிப்போனவளே என்றன் கன்னி; கடற்கன்னி; என்னோடு ஒற்றித்து என் வாழ்வில் என்னோடு பயணிக்கும் இல்லாளே நான் கண்ட அங்கையற்கன்னி.

Yogesvari Samugom சொன்னது…

அதனால் என்ன? நானும் தான் பார்த்ததில்லை கடற்கன்னி மை..
கடலில் கடற்கன்னிகள் மட்டும் தான் உண்டா? கடற்கண்ணனையும் கொஞ்சம் தலைக்காட்டச்சொல்லுங்கள் பார்த்தால்....
நன்றி..

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்