பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

மார்ச் 09, 2022

- குழந்தையா அது...? -

குழந்தை ஒன்று வந்திருந்தது. குழந்தையா அது; அது ஒரு குரங்கு அப்படித்தான் நடந்து கொண்டது. ஐந்து வயதுதான். எனக்கு அவன் பையன். வீட்டிற்கு அவன் குழந்தை.

சரி குழந்தையாகவே வைத்துக்கொள்ளட்டும். இப்படியா வளர்ப்பார்கள். அது எதையாவது செய்துக்கொண்டே இருக்கிறது. ஓரிடத்தில் உட்கார மாட்டேன் என்கிறது. சாப்பிடும் போது கூட அதன் தொல்லை தாங்க முடியவில்லை.

நான் புத்தகம் வாசிக்கும் போது யாரும் இடைஞ்சல் செய்தால் எனக்கு ஒவ்வாது. என் புத்தகங்களில் யாரும் கைவைத்தால் எனக்கு ஆகாது. என் வாசிப்பு மேஜை நாற்காலியில் யாரும் உட்காரக் கூடாது. அனைத்தும் அது செய்தது. புத்தகத்துடன் அமரும் போதுதான் பக்கத்தில் அமர்ந்து ஏதேதோ கதைப்பேசியது. புத்தகங்களை எடுத்து மாற்றி மாற்றி அடுக்கி வைத்தது. நாற்காலியில் அமர்ந்து சுழன்று சுழன்று விளையாடியது. 

வீட்டின் அமைதியே போய்விட்டது. என்ன பிள்ளையை வளர்க்கிறார்கள். எப்படித்தான் சமாளிக்கிறார்கள். ஒன்றுமே புரியவில்லை. ஒரு வாரம் கூட என்னால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. நல்லவேளையாக ஆறாவது நாளே கிளம்புகிறது. 

போகும் போது கூட அதற்கு சேட்டைகள் குறைந்தபாடில்லை. சென்றுவிட்டது. இனி தொல்லை இல்லை. நிம்மதியாக இருக்கலாம். வீடு அமைதியாக இருக்கும்.

ஆனால், ஏதோ ஒன்றை அக்குழந்தை என்னிடம் விட்டு சென்றது. அது என்னவென்று புரியவில்லை. மீண்டும் அக்குழந்தை எப்போது வருமெனவும் தெரியவில்லை.

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்