மர்லின் 5

மர்லின்
நீதான் எத்தனை விதமானவள்
எத்தனை இதமானவள்...
எட்டி எடுக்க முடியாவிட்டாலும்
எக்கி எடுக்க முடிந்ததால்
புத்தகங்கள் கூட
இறகின்றி
உயரத்தில் உட்கார்ந்துக் கொள்கின்றன
உன்னை எதிர்ப்பார்த்து விழிக்கின்றன
மனிதன்
நான் என்ன செய்ய
மர்லின்...
கொஞ்சம்
இதழ் கொடேன்
இறுக்கிக்கொள்கிறேன்
இருக்கும் புத்தகங்கள்
பொறாமையில்...