பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

செப்டம்பர் 28, 2019

ஊதா கண் தேவதை 1



எந்த ஒரு மாய எதார்த்தத்தாலும்
காட்டிவிட முடியாத தேவதை நீ
ஒற்றைவிழி பார்வையில் ஓராயிரம் வாசல்களை திறந்துவிடுகிறாய்
ஒவ்வொன்றும் ஒவ்வொரு யுகங்களில் வாழ்வை காட்டி நிற்கிறது
சிங்கங்களிடம் சிரித்து
விளையாடுகிறாய்
முதலைகள் முதுகில்
படுத்துறங்குகிறாய்
மரங்களின் நுனியில்
நாட்டியம் செய்கிறாய்
பூச்சி புழுக்களுடன்
விருந்துண்ணுகிறாய்
காளான் செடி குடைகளில்
மழை தடுக்கிறாய்
புகைப்படங்களுள் புகுந்து
பேசுகிறாய்
இத்தனைக்குன் மேலாய்
மனிதன் என்மீது மனதார காதல் கொள்கிறாய்....

#தயாஜி
#ஊதா_கண்_தேவதை

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்