பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

செப்டம்பர் 28, 2019

மர்லின் 5




மர்லின்

நீதான் எத்தனை விதமானவள்
எத்தனை இதமானவள்...

எட்டி எடுக்க முடியாவிட்டாலும்
எக்கி எடுக்க முடிந்ததால்

புத்தகங்கள் கூட
இறகின்றி
உயரத்தில் உட்கார்ந்துக் கொள்கின்றன
உன்னை எதிர்ப்பார்த்து விழிக்கின்றன

மனிதன்
நான் என்ன செய்ய

மர்லின்...

கொஞ்சம்
இதழ் கொடேன்
இறுக்கிக்கொள்கிறேன்

இருக்கும் புத்தகங்கள்
பொறாமையில் பொசுங்கட்டும்

இனிமேல் புத்தகங்கள்
நம்மால் பிறக்கட்டும்

வரிகள் ஒவ்வொன்றிலும்
வாசனை தெளித்திடலாம்

படிப்பதில் போதை
கொடுத்திடலாம்

இன்னும் இன்னும்
உயரத்தில் அடுக்கிடலாம்
காதலை உதிரத்தில் கலந்திடலாம்...

வார்த்தைகளிலாவது
நாம்
வாழ்க்கை கொள்வோம்

வாசிக்கின்றவர்களின் வயதினை
கொல்வோம்


-தயாஜி-

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்