பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

செப்டம்பர் 28, 2019

கதை_வாசிப்பு_2019 – 2 'கதிர்ச்சிதைவு'




கதை_வாசிப்பு_2019 – 2
கதை – கதிர்ச்சிதைவு
எழுத்து – அனோஜன் பாலகிருஷ்ணன்
இதழ் – காலச்சுவடு
திகதி – செப்டம்பர் 2019


கதிர்ச்சிதைவு. தலைப்பு ஒரு முறைக்கு இருமுறை சரியான சொல்லா அல்லது கதையில் வேறு பொருள் கொண்ட சொல்லா என நினைக்க வைத்தது. கதையின் நாயகன் ஒருமுறை தனது உரையாடலில் இவ்வாறு சொல்கிறான் “வானவில் என்பதே கதிர்ச்சிதைவின் மூலம் தென்படும் கானல் நீர்தான்.” முதலி வெறுமனே தலைப்பை சொல்லிக்காட்ட காரணம் என அவ்விடத்தை விட்டு நகர்ந்து கதைக்குள் செல்லலானேன்.

கதையினை வாசித்து முடித்ததும் ஏதோ ஒன்று மீண்டும் கதையை வாசிக்க அழைத்தது. ஏனெனின் உபயோகப்பட்டிர்ருகும் மொழி சட்டென எனக்கு நெருக்கமாகவும் அந்நியமாகவும் பூச்சி காட்டியது. சில இடங்களில் எங்கள் வட்டார வழக்கில் இருந்து இன்று மறந்து போயிருந்த சில வார்த்தைகள் இருந்தன. மீண்டும் கதிர்ச்சிதைவுக்கு கதாப்பாத்திரம் சொன்ன காரணம் மனதில் அலை மோதியது.

தனது பால்ய வயதில் நண்பனுக்கு செய்துவிட்ட துரோகத்தின் நிழல் மீண்டும் தன் மீது விழ அதிலிருந்து மீழ முடியாமல் திணறுகிறான் கதாநாயகன். அந்த சம்பவத்தை காதலியிடம் சொல்லும் போது நம்மாலும் அவ்விடத்தை ஜீரணிக்க முடியவில்லை.

மூன்று பிரிவுகளாக கதாநாயகன் தன் கதையைச் சொல்லிச்செல்கிறான். கடைசிவரை அவனது பெயர் நமக்கு தெரியவில்லை. அது ஒரு வகையில் நமக்து குற்றவுணர்ச்சியை துசி தட்டிவிடுகிறது.

‘வெற்றுத்தோட்டாக்களை சேமித்து விளையாடும் சிறுவர்களாக’ இருந்த தனது பால்யத்தையும் இராணுவ அதிகாரிகளீடம் சிக்கிக்கொண்டதும் சொல்லப்படும் போது மனதில் பாரம் தொற்றிக்கொள்கிறது.

போரைக்காட்டியும் போர்முடிந்த மௌனம் எத்தனை கொடூரமானது.
எல்லோரும் படிக்க வேண்டும் என மொழியில் சமரசம் வைக்காமல், தன்மொழியில் கதையினை நகர்த்தி வாசகனுக்குள்ளாக புதிய தேடலை இக்கதை தொடங்குகிறது.

தேக்கி வைத்திருக்கும் குற்றவுணர்ச்சி தன்னை வெளிகாட்டும் நேரம் நிச்சயம் பெரிய மனபாதிப்பை விட்டுச்செல்லும்.
கதையின் முடிவு முடிவற்று தொடர்கிறது. இங்கு யாருக்கும் யாரும் சமாதனம் சொல்லி எதனையும் தீர்த்து வைக்க முடியாது என்பதை இக்கதை நம்பவைக்கிறது.



- தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்