பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

செப்டம்பர் 28, 2019

மர்லின் 2



மர்லின்
அப்படியே தூங்கிடு
இவ்வுலகு
நாம் வாழ்ந்த உலகல்ல

கிடைக்கும் நேரமே போதுமென்றுணர்
உறங்கும் தருணமே
உன்னால் மூச்சினை உணர முடியும்
இதர நேரமெல்லாம்
மேல் மூச்சு கீழ் மூச்சென
ஓடி ஓடியே உன்னை மறைத்திட வேண்டும்

பேச்சுகொடுக்க மரங்கள் இங்கில்லை
கடித்து காட்ட அணில்கள் இங்கில்லை
ஆற்றை கடக்க முதலைகள் இங்கில்லை
சக்கரை கொடுக்க எறும்புகள் இங்கில்லை
காலை கூப்பிட சேவல்கள் இங்கில்லை
சிரித்து பேசா பூக்கள் இங்கில்லை
வானில் அழைத்திட பறவைகள் இங்கில்லை
படித்து முடித்திட புத்தகங்கள் இங்கில்லை
ஒளியால் நடத்த விளக்குகள் இங்கில்லை

இங்கிருப்பதெல்லாம் ஒன்றுதான்
மனிதர்கள்
ஊர் கொன்று தான் தின்று
வளரும் மனிதர்கள்

நம் உலகு செல்ல
வழித்தடங்கள் இல்லை
எல்லோரும் சேர்த்து
அங்கு
பிணங்களை அடுக்கிட்டார்கள்
நீயோ நானோ
நாமோ அங்கு
போனால்
பிணமாவோம்
பிணவாடையில் ஒன்றாவோம்

உறங்கும் நேரம்தான் இங்கு
உனக்கான நேரம்

எப்போது விழிக்கிறாயோ
இருளை நீ சந்திப்பாய்

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்