பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

செப்டம்பர் 28, 2019

'ச்சீ சிட்டுக்குருவி'



அன்று
என் வாழ்நாள் துயரம்
தன்னை தொடங்கியது

ஏதேதோ பாவங்களின்
வட்டி கணக்குகள் கண்முன்னே
கொட்டிக்கொண்டிருக்கின்றன

எத்தனையோ ஏமாற்றங்கள்
எத்தனையோ துரோகங்கள்
எத்தனையோ பொய்கள்
எத்தனையோ வெறுப்புகள்
எத்தனையோ பழிவாங்கள்கள்
எத்தனையோ ஒழிவுமறைவுகள்

எந்த உணர்வுமின்றி
பார்த்துக்கொண்டிருந்தேன்
சமயங்கள் சிரிக்கவும் செய்தேன்

ஒரு முறை மெல்லமாய் சிரித்தேன்
ஒரு முறை வாயோரத்தில் சிரித்தேன்
ஒரு முறை கண்மூடி சிரித்தேன்
ஒரு முறை கண்கலங்க சிரித்தேன்
ஒரு முறை சத்தமிட்டு சிரித்தேன்
ஒரு முறை வேண்டாவெறுப்பாக சிரித்தேன்

அப்போதுதான் தொடங்கியது
ஆரம்பப்புள்ளி அடையாளம் சொல்லிக்கொண்டது

சிட்டுக்குருவி
ஒரு சிட்டுக்குருவி
கேவலம் ஒரு சிட்டுக்குருவி
ச்சீ கேவலம் ஒரு சிட்டுகுருவி

மிகவும் சோர்ந்திருந்தது அதன் முகம்
எவ்வளவோ தூரம் பறக்க நினைத்த சிறகுகள் சுருங்கிக்கிடத்தன
கன்னங்கள் யாருக்காகவோ காத்திருந்த கருவளையம் சுழன்றுக்கொண்டிருந்தது

இத்தனைக்கும் மேலாக அதன் கண்களின் ஒளி
என் மீது பாய்கிறது
அதன் மென்மை இறகுகள் என் தலையை தடவுகின்றன
அதன் கன்னங்கள் என் கன்னத்தில் உரசுகிறது
அதன் சிரிப்பு என் காதுகளைக் கடந்து
இதய ஒட்டடைகளில் வாளர்ந்திருக்கும் சிலந்திகளை அணைத்து
நட்பு பாராட்டுகின்றன

அதன் ஒரு சொல்
ஒரே ஒரு 
ஒரு சொல்
என்னை மன்னித்தேன் என மறைகிறது

மன்னிப்பை எதிர்க்கொள்வதைவிடவா
இன்னொரு துயர் தொடக்கம் வேண்டும் மனிதனுக்கு...

#தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்