பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பிப்ரவரி 05, 2025

- அரசியல் தெரிந்தவர்கள் -


 பாலாடை

பால் பாட்டில்

நம்கின்

பூத்தின்

பௌடர்

கிலுகிலுப்பை

கரடி பொம்மை

இவற்றுடன்

மிச்சமிருக்கும் தாய்ப்பால் சொட்டுகள்

என எல்லாவற்றையும்

சிதைந்த

அந்தக் குழந்தைகளின்

கூடவே புதைத்துவிட்டார்கள்


ஒன்றின் மேல்

ஒன்றென

காலம்காலமாக புதைக்கப்பட்ட

குழந்தைகளில் இருந்து

எந்தவித குற்தவுணர்ச்சியும்

யாருக்குமே இதுவரை முளைக்கவில்லை...


சென்ற குழந்தைகள் 

ஒருபோதும் 

திரும்புவதில்லை


உலகம் ஒருநாள்

குழந்தைகளே பிறக்காத

நாளாகி விடிந்தாலும்


பழகிவிட்ட பதவி

பைத்தியங்களும்

அதிகார அரக்கர்களும்

புதைத்த குழந்தைகளையே 

மீண்டும்  மீண்டும் தோண்டி

எடுத்து

மீண்டும் மீண்டும்  புதைத்து

விட்டுதான்

நிம்மதியாவார்கள்..


செத்தபின் தான்

சொர்க்கமும் நரகமும்

என்பதை முழுதாய்ப்

புரிந்தால் மட்டுமே 

அரசியல் செய்ய முடியும் போலும்


Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்