தீபாவளி 2025 - புத்தகங்கள்
தீபாவளி 2025 - புத்தகங்கள்
இது பொம்மியின் இரண்டு வயது தீபாவளி. பொம்மி, இல்லாள், நான் என மூவரும் வழக்கம் போல
தீபாவளிக்கும் என் பிறந்தகம் சென்றிருந்தோம்.
ஏறக்குறைய பத்தாண்டுகளாய் கோலாலும்பூரில் இருந்தாலும் நான்
பிறந்து வளர்ந்த கெடா, சுங்கைப்பட்டாணி எப்போதும் என் பசுமையான நினைவுகளில் இருக்கிறது. அதனால்தான் என்னவோ வீட்டிற்கு செல்லும் ஒவ்வொரு முறையும் வீட்டை விட்டு வெளியே செல்வதை விரும்ப மாட்டேன். காரணமே இல்லாமல் வீடு முழுக்க நடந்து கொண்டிருப்பேன்.
இத்தனைக்கும் அந்த வீட்டில் நான் சில ஆண்டிகளே இருந்தேன். அதற்கு முன் ஆறுமுகம்பிள்ளை தோட்டம் என்று அழைக்கப்படும் யு.பி தோட்டத்தில்தான் எனது 20 ஆண்டுகள் கடந்து சென்றன.
அந்த சமயத்திலேயே நான் எழுத தொடங்கியிருந்ததால், பத்திரிகைகளில் என் படைப்புகளில் வரும் என் பெயருக்கு பின்னால் யு.பி தோட்டம் என் இருக்கும்.
அங்கு நான் பார்த்த கதைகளும் என்னைப் பார்த்த கதைகளும் அதனை சுமந்திருந்த மனிதர்கள் ஏராளம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சுவாரஸ்யமும் அதற்கு இணையாக சூழ்ச்சியும் கொண்டது.
என்றாவது ஒரு நாள் நான் நாவல் எழுதினால் அவர்களில் சிலரேனும் வந்து சேர்வார்கள் என நம்புகிறேன். அந்த வடிவத்திலேயே அவர்களை என்னால் முழுமையாக சொல்ல முடியும்.
சில அரசியல் காரணங்களால் அந்த தோட்டத்தை காலி செய்ய வேண்டி வந்தது. அதன் பின்னரே இப்போது இருக்கும் 'ஆமான் ஜயா'விற்கு வந்தோம். அங்கிருந்து சில ஆண்டுகளிலேயே நான் கோலாலம்பூருக்கு வந்துவிட்டேன்.
அங்கு நான் சந்தித்தவற்றை என் நாவலின் இரண்டாம் பகுதியாக எழுதினால் நீங்கள் கட்டாயம் வாசித்துப் பாருங்கள். நினைத்துப்பார்க்கவே முடியாத என் கடந்த காலத்தை எழுதி பார்ப்பதற்கு எனக்கு இன்னும் தைரியம் வரவில்லை என்ன செய்ய.
பொம்மிக்கு இரண்டு வயது என்பதால் அவளால் வீடே கொண்டாட்டம் ஆனது. பாட்டி தாத்தாவுடன் நெருக்கமாகிவிட்டாள். பயமின்றி பட்டாசு சத்தங்களை இரசித்தாள். மத்தாப்புகளை கொழுத்தி விளையாடினாள்.
தீபாவளி முடிந்த இரண்டாம் நாள், எனக்கு மருத்துவமனை சந்திப்பு உள்ளதால் சீக்கிரமே கோலாலும்பூர் திரும்பிவிட்டோம்.
வரும்போது அப்பாவின் புத்தக அலமாரியில் இருந்து எனக்கு தேவையான சில புத்தகங்களை அவரிடம் கேட்டு எடுத்து வந்தேன்.
எனது சின்ன வயதில் அப்பாதான் எனக்கு எப்போதும் புத்தகங்கள் வாங்கி கொடுப்பார். புத்தகம் வாங்கவும் அழைத்துச் செல்வார். அவர் கொடுத்த பழக்கத்திலேயே எனக்கு புத்தகங்கள் பழக்கமாகின. இன்று நான் அவருக்கு அவ்வப்போது புத்தகங்கள் வாங்கி கொடுக்கிறேன்.
நாமே ஒரு புத்தகக்கடை நடத்தினாலும், அதிலிருந்து வெளியாகும் புத்தகங்களுக்கு கணக்கு காட்டவேண்டுமே. அதற்காகவே அப்பா பெயரில் பில் எழுதி நான் கட்டுவேன். எவ்வளவுதான் பணம் கட்டினாலும் எனது சின்ன வயதில் அப்பா வாங்கி கொடுத்த புத்தகங்களுக்கு ஈடாகாது. அன்றையக் குடும்ப சூழலில் புத்தகங்களுக்கு அப்பா செலவழித்த பணம் இன்றும் எனக்கு பிரமிப்பை கொடுக்கின்றன.
இம்முறை அப்பாவின் அலமாரியில் இருந்து அதிகம் மலேசிய எழுத்தாளர்களின் புத்தகங்களை எடுத்தேன். ஒவ்வொரு மாதமும் ஒரு மலேசிய புத்தகம் குறித்து கட்டுரை எழுதுவதற்கு உதவும். என்னைவிட அதிகம் வயதான புத்தகங்களில் சில இன்றும் எனக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கின்றன.
இதில் சில புத்தகங்கள், அந்த வீட்டில் இருக்கும் போது அப்பா எனக்கு வாங்கி கொடுத்தவை.
அடுத்த என்ன வாசிப்போம், என்பதில் இருக்கும் மர்மம் எனக்கு விருப்பமானது. வாசித்ததும் அதனை எழுதுகிறேன்.
என் அப்பா எனக்கு சேர்த்து வைத்த சொத்துகளில் முதன்மையானது அவரின் புத்தகங்கள்தான், முடிந்தால் நம் பிள்ளைகளுக்கும் அப்படி கொஞ்சம் சொத்தை சேர்த்து வைப்போம். அதற்கு முன் புத்தகங்களும் சொத்துகள்தான் என கொண்டாடும் மனநிலையை அடுத்த தலைமுறைக்கு கற்றுக்கொடுப்போம்.
இது பொம்மியின் இரண்டு வயது தீபாவளி. பொம்மி, இல்லாள், நான் என மூவரும் வழக்கம் போல
தீபாவளிக்கும் என் பிறந்தகம் சென்றிருந்தோம்.
ஏறக்குறைய பத்தாண்டுகளாய் கோலாலும்பூரில் இருந்தாலும் நான்
பிறந்து வளர்ந்த கெடா, சுங்கைப்பட்டாணி எப்போதும் என் பசுமையான நினைவுகளில் இருக்கிறது. அதனால்தான் என்னவோ வீட்டிற்கு செல்லும் ஒவ்வொரு முறையும் வீட்டை விட்டு வெளியே செல்வதை விரும்ப மாட்டேன். காரணமே இல்லாமல் வீடு முழுக்க நடந்து கொண்டிருப்பேன்.
இத்தனைக்கும் அந்த வீட்டில் நான் சில ஆண்டிகளே இருந்தேன். அதற்கு முன் ஆறுமுகம்பிள்ளை தோட்டம் என்று அழைக்கப்படும் யு.பி தோட்டத்தில்தான் எனது 20 ஆண்டுகள் கடந்து சென்றன.
அந்த சமயத்திலேயே நான் எழுத தொடங்கியிருந்ததால், பத்திரிகைகளில் என் படைப்புகளில் வரும் என் பெயருக்கு பின்னால் யு.பி தோட்டம் என் இருக்கும்.
அங்கு நான் பார்த்த கதைகளும் என்னைப் பார்த்த கதைகளும் அதனை சுமந்திருந்த மனிதர்கள் ஏராளம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சுவாரஸ்யமும் அதற்கு இணையாக சூழ்ச்சியும் கொண்டது.
என்றாவது ஒரு நாள் நான் நாவல் எழுதினால் அவர்களில் சிலரேனும் வந்து சேர்வார்கள் என நம்புகிறேன். அந்த வடிவத்திலேயே அவர்களை என்னால் முழுமையாக சொல்ல முடியும்.
சில அரசியல் காரணங்களால் அந்த தோட்டத்தை காலி செய்ய வேண்டி வந்தது. அதன் பின்னரே இப்போது இருக்கும் 'ஆமான் ஜயா'விற்கு வந்தோம். அங்கிருந்து சில ஆண்டுகளிலேயே நான் கோலாலம்பூருக்கு வந்துவிட்டேன்.
அங்கு நான் சந்தித்தவற்றை என் நாவலின் இரண்டாம் பகுதியாக எழுதினால் நீங்கள் கட்டாயம் வாசித்துப் பாருங்கள். நினைத்துப்பார்க்கவே முடியாத என் கடந்த காலத்தை எழுதி பார்ப்பதற்கு எனக்கு இன்னும் தைரியம் வரவில்லை என்ன செய்ய.
பொம்மிக்கு இரண்டு வயது என்பதால் அவளால் வீடே கொண்டாட்டம் ஆனது. பாட்டி தாத்தாவுடன் நெருக்கமாகிவிட்டாள். பயமின்றி பட்டாசு சத்தங்களை இரசித்தாள். மத்தாப்புகளை கொழுத்தி விளையாடினாள்.
தீபாவளி முடிந்த இரண்டாம் நாள், எனக்கு மருத்துவமனை சந்திப்பு உள்ளதால் சீக்கிரமே கோலாலும்பூர் திரும்பிவிட்டோம்.
வரும்போது அப்பாவின் புத்தக அலமாரியில் இருந்து எனக்கு தேவையான சில புத்தகங்களை அவரிடம் கேட்டு எடுத்து வந்தேன்.
எனது சின்ன வயதில் அப்பாதான் எனக்கு எப்போதும் புத்தகங்கள் வாங்கி கொடுப்பார். புத்தகம் வாங்கவும் அழைத்துச் செல்வார். அவர் கொடுத்த பழக்கத்திலேயே எனக்கு புத்தகங்கள் பழக்கமாகின. இன்று நான் அவருக்கு அவ்வப்போது புத்தகங்கள் வாங்கி கொடுக்கிறேன்.
நாமே ஒரு புத்தகக்கடை நடத்தினாலும், அதிலிருந்து வெளியாகும் புத்தகங்களுக்கு கணக்கு காட்டவேண்டுமே. அதற்காகவே அப்பா பெயரில் பில் எழுதி நான் கட்டுவேன். எவ்வளவுதான் பணம் கட்டினாலும் எனது சின்ன வயதில் அப்பா வாங்கி கொடுத்த புத்தகங்களுக்கு ஈடாகாது. அன்றையக் குடும்ப சூழலில் புத்தகங்களுக்கு அப்பா செலவழித்த பணம் இன்றும் எனக்கு பிரமிப்பை கொடுக்கின்றன.
இம்முறை அப்பாவின் அலமாரியில் இருந்து அதிகம் மலேசிய எழுத்தாளர்களின் புத்தகங்களை எடுத்தேன். ஒவ்வொரு மாதமும் ஒரு மலேசிய புத்தகம் குறித்து கட்டுரை எழுதுவதற்கு உதவும். என்னைவிட அதிகம் வயதான புத்தகங்களில் சில இன்றும் எனக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கின்றன.
இதில் சில புத்தகங்கள், அந்த வீட்டில் இருக்கும் போது அப்பா எனக்கு வாங்கி கொடுத்தவை.
அடுத்த என்ன வாசிப்போம், என்பதில் இருக்கும் மர்மம் எனக்கு விருப்பமானது. வாசித்ததும் அதனை எழுதுகிறேன்.
என் அப்பா எனக்கு சேர்த்து வைத்த சொத்துகளில் முதன்மையானது அவரின் புத்தகங்கள்தான், முடிந்தால் நம் பிள்ளைகளுக்கும் அப்படி கொஞ்சம் சொத்தை சேர்த்து வைப்போம். அதற்கு முன் புத்தகங்களும் சொத்துகள்தான் என கொண்டாடும் மனநிலையை அடுத்த தலைமுறைக்கு கற்றுக்கொடுப்போம்.
0 comments:
கருத்துரையிடுக