பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஆகஸ்ட் 02, 2009

முதலிரவு (கற்பனை கடந்து........)

“ஏங்க நம்மை நம்ம வீட்டில உள்ளவங்க ஏத்துக்குவாங்களா..?”

“இந்த நேரத்தில் போய்... இந்த கதை தேவையா..? நேரத்தை ஏன்தான் இப்படி வீணடிக்கிறயோ..... !”

“என்னங்க இப்படி பெசறீங்க..!?”

“அதுக்கில்லை, நாம என்ன ஊர்ல உலகுத்துல செய்யாததையா செஞ்சிட்டோம்.எல்லார் போலவும் காதலிச்சோம். வீட்டில் நம்ம காதலை ஏத்துக்கலை அதான் ,ஓடி வந்திட்டோம் நம்ம காதலை வீட்டில் ஏத்துக்கிட்டிருந்தா நாம ஏன் வீட்டைவிட்டு ஓடி வந்திருக்கப்போறோம் ”

“என்னதான் உங்களை நம்பி வந்திட்டாலும், என் ஞாபகம் எல்லாமே என் வீட்டில் உள்ளவங்க மேலதான் இருக்கு.....!”

“நீ சொல்றதும் சரிதான். யாருக்குதான் வீட்டு ஞாபகம் இல்லாமப் போகும்..?.. அதும் நீதான் வீட்டுக்கு மூத்தப் பொண்ணு ..... நீதான் தம்பி தங்கச்சிக்கு ஒரு உதாரணமா இருந்திருக்கனும்....? ஆனா நீயே .....இப்படி.... ”

“இப்ப மட்டும் என்ன புத்தர் மாதிரி பேசறிங்க..!? அன்னிக்கு இந்த அறிவு எங்கே போச்சாம்.....? என்னை ஓடிவர சொன்னதே நிங்கதானே..! ”

“சரி....சரி...இப்போ நீ என்னை என்னதான் செய்யசொல்ற.....?”

“நம்ம குடும்பத்தில உள்ளவங்க ,நம்மை சேர்த்துக்கனும் முடியுமா..? ”

“..ம்.. எல்லாம் குழந்தைப் பொறந்தா சரியாகிடும்”

“ஆமா இப்படி சொல்லியே ஆறு பிள்ளையாயிடுச்சி.. இப்போ.. இன்னும் ஒன்னா....???!!!”




........தயாஜி வெள்ளைரோஜா.......

Related Posts:

  • எளிய... மீண்டும் மீண்டும்  நடத்திக் காட்டுகிறோம் எல்லா கொடுமைகளையும் மீண்டும் மீண்டும் உடைத்துக் காட்டுகிறோம் எல்லா நம்பிக்கைகளுக்கும் ஆனாலும் … Read More
  • புத்தனாகி சிரியுங்கள் அல்லது குமட்டியாகி சிதறுங்கள் 29/03/2020 - தமிழ் மலர், ஞாயிறு இதழில் பிரசுரமானது. நன்றி    ‘குமட்டிக்கா’ என்றதும் அவள் கொஞ்சம் அசூயையாகப் பார்த்தாள். ஒருவேள… Read More
  • புத்தகவாசிப்பு_2020_ 1 'பிரபஞ்சனின் நேர்காணல்கள்'      நேற்று ஆரம்பித்து இன்று நிறைவு செய்த புத்தகம். 'பிரபஞ்சன் நேர்காணல்கள்' . எழுத்து ந.முருகேசபாண்டியன். மொத்தம் 72 பக்கங்களைக் … Read More
  • கவிதை வாசிப்பு - 1 சல்மாவின் கவிதைகள். காலச்சுவடு மார்ச் 2020-ல் வந்திருந்தது. தனியாக கவிதைக்கு தலைப்பு ஏதும் வைக்கவில்லை. மூன்று கவிதைகள். முதல் கவிதையில் ஒரு ப… Read More
  • #கதைவாசிப்பு_2020_15 'ஓணான்கள்' #கதைவாசிப்பு_2020_15 கதை – ஓணான்கள் எழுத்து – அம்ரிதா ஏயம் புத்தகம் – விலங்குகள் தொகுதி ஒன்று அல்லது விலங்கு நடந்தைகள் (சிறுகதை தொகுப்ப… Read More

7 comments:

kasturi Sagar சொன்னது…

nenachu kuude paakale aaru pillaiku appa amma nu...naa ninaithen puthu mana thambathiyargalnu.. tidikiddu poonen kadaisu variyai padithu....ha ha ha

தயாஜி சொன்னது…

hi....hi... innum niraya irukku...!!

maruthamooran சொன்னது…

rasithen

தயாஜி சொன்னது…

நன்றி... நண்பரே

AnGel சொன்னது…

interesting... keep it up

tamil சொன்னது…

rombe nalla irukku anna... ella guys um soldre oru dialogue....“சரி....சரி...இப்போ நீ என்னை என்னதான் செய்யசொல்ற.....?”...hmmm.....

தயாஜி சொன்னது…

:) எத்தனைப் பேரோட கதைகளை பார்த்திருக்கோம்....

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்