பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஆகஸ்ட் 30, 2009

பின்னழகு...!(முடிக்கும் வரை பொறுங்கள்....!)

முன்னே பிறந்ததனால்....
பல மூட்டை..
என் பின்னே....!

"தம்பிக்கும் தங்கைக்கும்
நீதான் உதாரணம்"


அம்மாவுக்குத் தெரிந்தது.....
இதுதான்
இது மட்டும்தான்...

என் தவறை ...
அவர்களும் தொடர்வானேன்..?
புத்திக்குத் தெரியுமே,

சரி எது..?
பிழை எது..?

முன்னவன் குழியில் விழ..
பின்னவனும் குழியில் விழுவானேன்....?

பாதையை மார்றினால்..
பயணங்கள் தொடருமே.....!!

என் தப்பை ..
அவன் செய்வானேன்...?
என் மீதுகுறை சொல்வானேன்...?

கடைக்கும் நானே..

கடனுக்கும் நானே..

ஏச்சுக்கும் நானே..
என் பின்னரின்..
வீழ்ச்சிக்கும் நானா....?

அவரவர் பாதை..
அதிலொரு பயணம்

உதாரணம் போதும்..
உடன் வருவதை..

தவிருங்கள்.....


................தயாஜி வெள்ளைரோஜா..............

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்