பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஆகஸ்ட் 01, 2009

திருவிழா.....!

பல வருசமாச்சி,
என் தோட்டத் திருவிழாவைப்பார்த்து
எப்படி மாறியிருக்கும்..?
யார் பூசாரி..?
எந்த வழியா தேர் போகும்..?
என்னக் கடைகள்..?
ம்.....!
அதான் வந்தாச்சே,
இனிமே நாமே பார்த்துக்கவேண்டிதான்..
அட..அட.. அம்மன்,
பவனி வரும் அழகே தனிதான்..
புடவைக்கூட்டமும்,
வேட்டிக்கூட்டமும்,
கலந்தே நடந்துக்கொண்டிருந்தன...
உறுமியுடன் பஜனையும்,
பலரை முறைக்கவைத்தது..
சிலரைச் சிரிக்கவைத்தது..
நானும் இருதலைக்கொள்ளி எறும்பானேன்..!!!!
அம்மன் ஆலயத்தை
நெருங்கி கொண்டிருந்த சமயம்..
ஏதோ சலசலப்பு..?!?!!?!?!?!?!
பெண்களின் அலறல்..?!?!?!!?!?!
சிறுவர்களின் ஓட்டம்.??!?!?!??!?!



“டேய் அவந்தாண்டா”
“ஐயோ..!”
“கடவுளே..”
“உடாதிங்கடா..”
“அவன் அங்க ஓடறாண்டா..?!?!”



கையில் ஆயுதங்களுடன்,
காவல் தெய்வத்திற்குப் போட்டியாக,
சில இளைஞர்களின் செயல்???!!!?!?!!?
கோவில் படிக்கட்டில் ‘இரத்தம்’
திருவிழா நிறுத்தப்பட்டது..
என் மனதில் ‘கறை’


................தயாஜி வெள்ளைரோஜா...................

Related Posts:

  • - விலை - "ஒரு பத்து வருஷம் இருக்குமா?" எனதான் அந்த உரையாடல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இருவரின் காபியும் முடிந்துவிட்டது. சாப்பிட்டத் தட்டில் மட்டு… Read More
  • புத்தகவாசிப்பு_2022_9_வாசிப்பின் வழிகள்வாசிப்பின் வழிகள்தலைப்பு – வாசிப்பின் வழிகள்எழுத்து – ஜெயமோகன்வகை – கட்டுரைகள்வெளியீடு – விஷ்ணுபுரம் பதிப்பகம்நூல் வாங்க - புத்தகச்சிறகுகள் புத்தகக்கட… Read More
  • - வந்த வேலை - நான் முதலில் பயந்துவிட்டேன். எப்படி பயப்படாமல் இருக்க முடியும். இந்த இடத்தில் யார்தான் நிற்பார்கள். அதுவும் உச்சி நேர வெயிலில். "ஹையோ ரொம்… Read More
  • அதனால் என்ன...? கடற்கன்னியை நீங்கள் பார்த்தது உண்டா?. ரொம்பவும் அழகாக இருக்கும். பார்ப்பது அவ்வளவு எளிதல்ல. பார்த்துவிட்டால் மறப்பதற்கு வாய்ப்பே இல்லை.&nb… Read More
  • - துரோகி - "யாராவது என்னைக் கொல்லத்தான் போகிறார்கள்....""அதற்காக....""நீயே என்னைக் கொன்றுவிடு....""முட்டாளா நீ...... வாயை மூடு...""முட்டாள் அல்ல... வ… Read More

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்