பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஆகஸ்ட் 01, 2009

திருவிழா.....!

பல வருசமாச்சி,
என் தோட்டத் திருவிழாவைப்பார்த்து
எப்படி மாறியிருக்கும்..?
யார் பூசாரி..?
எந்த வழியா தேர் போகும்..?
என்னக் கடைகள்..?
ம்.....!
அதான் வந்தாச்சே,
இனிமே நாமே பார்த்துக்கவேண்டிதான்..
அட..அட.. அம்மன்,
பவனி வரும் அழகே தனிதான்..
புடவைக்கூட்டமும்,
வேட்டிக்கூட்டமும்,
கலந்தே நடந்துக்கொண்டிருந்தன...
உறுமியுடன் பஜனையும்,
பலரை முறைக்கவைத்தது..
சிலரைச் சிரிக்கவைத்தது..
நானும் இருதலைக்கொள்ளி எறும்பானேன்..!!!!
அம்மன் ஆலயத்தை
நெருங்கி கொண்டிருந்த சமயம்..
ஏதோ சலசலப்பு..?!?!!?!?!?!?!
பெண்களின் அலறல்..?!?!?!!?!?!
சிறுவர்களின் ஓட்டம்.??!?!?!??!?!



“டேய் அவந்தாண்டா”
“ஐயோ..!”
“கடவுளே..”
“உடாதிங்கடா..”
“அவன் அங்க ஓடறாண்டா..?!?!”



கையில் ஆயுதங்களுடன்,
காவல் தெய்வத்திற்குப் போட்டியாக,
சில இளைஞர்களின் செயல்???!!!?!?!!?
கோவில் படிக்கட்டில் ‘இரத்தம்’
திருவிழா நிறுத்தப்பட்டது..
என் மனதில் ‘கறை’


................தயாஜி வெள்ளைரோஜா...................

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்