பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூலை 21, 2024

சிறகுகளின் கதை நேரம் - 31வது கலந்துரையாடல்

 


கடந்த திங்கட்கிழமை, வாராந்திர 'சிறகுகளின் கதை நேரம்' சிறுகதைக் கலந்துரையாடல் வழக்கம் போல் சிறப்பாக நடைபெற்றது. 


இது 31வது கலந்துரையாடல், இதில் எழுத்தாளர் கோ.புண்ணியவான் எழுதிய 'கரகம்' சிறுகதைக் குறித்து உரையாடினோம்.


'இச்சிறுகதையில் அதன் உரையாடல்கள் எதார்த்தமானவையாகவும் அச்சூழலைக் கண்முன் கொண்டுவந்ததாகவும் எழுத்தாளர் சச்சிதானந்தன் கூறினார். அதோடு எழுத்தாளர் சிறுகதையில் பயன்படுத்திய வருணனைகள் தன்னைக் கவர்ந்ததாகவும் கூறினார்.


எழுத்தாளரும் மருத்துவருமான ராஜேஸ், 'கரகம்' சிறுகதையின் களம் குறித்தும் எழுத்தாளர் பயன்படுத்திய மொழி குறித்தும் பேசினார். அதோடு இச்சிறுகதையில் முக்கிய கதாப்பாத்திரமாக இருக்கும் கரக பூசாரிக்கும் கரகம் ஆடுகின்றவரும் ஒருவரா அல்லது வெவ்வேறு ஆட்களா என கேள்வி எழுப்பினார். பின்னர் எழுத்தாளர் கோ.புண்ணியவான் அதற்கு பதிலும் கூறினார்.


இளம் எழுத்தாளர் பிருத்வி, இச்சிறுகதை வாசிக்க வாசிக்க, எழுத்தாளரின் கையறு நாவலை மீண்டும் வாசிக்கும் உணர்வைம் கொடுத்ததாகக் கூறியதோடு, திருவிழா , தீமிதி கொண்டாட்டச்சூழல் அழகாகச் சொல்லப்பட்டதாகவும் கூறினார்.


எழுத்தாளர் ஆ.வி.டேவிட், எழுத்தாளர் இச்சிறுகதையில் தீர்வு கொடுத்தாரா என்ற கேள்வியை முன்வைத்ததோடு, 90களில் நடந்த சில உண்மை சம்பவங்களையும் சுட்டிக்காட்டினார்.






எழுத்தாளர், ஆசிரியர் அன்பரசி, ஒரு குழுவிற்கும் ஒரு அமைப்பிற்கும் தலைவர் ஏன் வேண்டும் என்பதனை இக்கதையின் ஊடாக புரிந்து கொண்டதைக் கூறினார்.


சிங்கை எழுத்தாளர் சூரிய ரத்னா, சிங்கை சூழலில் கொண்டாடப்படும் சமய விழாக்களும் மலேசிய சூழலில் கொண்டாடப்படும் சமய விழாக்களுக்கும் உள்ள வித்தியாசங்களைப் பேசினார். 


அடுத்ததாக சிங்கப்பூரில் இருந்தே எழுத்தாளர் அருள் குமரன் இச்சிறுகதையில் வரும் தலைவர் கதாப்பாத்திரத்தை முன்வைத்து இருவேறு புரிதல்கள் இருப்பதைப் பேசினார்.


எழுத்தாளர் மணிராமு, தோட்ட வாழ்க்கையை எழுத்தாளர் எழுதிய விதத்தைப் பேசினார்.


எழுத்தாளர் இராமசாமி, இச்சிறுகதையில் வந்த கரக பூசாரியின் கதாப்பாத்திர வடிவமைப்பின் உண்மைத் தன்மையைக் கேள்வி எழுப்பினார்.


என்னளவில், 1990ம் ஆண்டு காலக்கட்டத்தில் லூனாஸ், கெடாவில் சம்சு என்னும் கள்ளச்சாராயம் குடித்து ஏறக்குறைய 40 பேர் இறந்தார்கள், மேலும் சிலருக்கு பார்வை பறி போனது.


அந்தச் சம்பவத்தில் இருந்து ஒரு பகுதியை எழுத்தாளர் 'கரகம்' சிறுகதையாக எழுதியுள்ளார். தோட்டச்சூழல் அங்கு வாழும் மனிதர்கள் அவர்களில் வாழ்க்கை முறை என, அளவாக தன் சிறுகதையில் எழுத்தாளர் கோ.புண்ணியவான் பயன்படுத்தி இருக்கிறார்.


நிகழ்ச்சியின் நிறைவில் எழுத்தாளர், வாசகர்களின் கேள்விக்கு பதில் கொடுத்ததோடு இச்சிறுகதை உருவான கதையையும் அவர் சந்திந்த மனிதர்களைக் குறித்தும் பேசினார்.


வழக்கம் போல பல்வேறு வேறுபட்ட பார்வையோடு  நிகழ்ச்சி நிறைவடைந்தது. அடுத்த வார திங்களில் இன்னொரு சிறுகதையோடும் அதன் எழுத்தாளரோடும் உரையாடுவோம் கலந்துரையாடுவோம்.


#சிறகுகளின்_கதை_நேரம் #தயாஜி 

#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை #வெள்ளைரோஜா_பதிப்பகம்

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்