பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூலை 21, 2024

சிறகுகளின் கதை நேரம் - 30வது கலந்துரையாடல்

💙சிறகுகளின் கதை நேரம்; சிறுகதைக் கலந்துரையாடல்.💙





இன்று 30-வது சந்திப்பு நடைபெற்றது. இன்றைய கலந்துரையாடலில் எழுத்தாளர் வனிதா ராமகிருஷ்ணன் எழுதிய 'சிற்பம்' சிறுகதையைக் குறித்து கலந்துரையாடினோம்.


வழக்கம் போல வாசிப்பில் ஆர்வம் கொண்ட எழுத்தாளர்களும் வாசகர்களும் கலந்து கொண்டு பேசினார்கள்.


மூத்த எழுத்தாளர் கோ.புண்ணியவான் கலந்துரையாடலில் பேசியவை; எழுத்தாளர்களுக்கு மட்டுமின்றி வாசிக்கின்றவர்களுக்கும் பயனாக அமைந்தது.


அதே போல இளம் எழுத்தாளர் பிருத்வி ராஜு சிறுகதைகளை உள்வாங்கி பேசும் விதமும் கவர்ந்தது. சிங்கபூரில் இருந்து ஒவ்வொரு வாரமும் தவறாது கலந்து கொண்டு தத்தம் கருத்துகளைப் பகிரும் எழுத்தாளர் சூர்ய ரத்னாவும் உற்சாகம் கொடுக்கின்றார்.


எழுத்தாளர் டேவிட், ஆசிரியை விசித்ரா ஆகியோரும் சிறுகதையையொட்டி தங்கள் பார்வைகளைப் பகிர்ந்து கொண்டார்கள்.


நிகழ்ச்சியில் நிறைவாக, எழுத்தாளர் வனிதா ராமகிருஷ்ணன் வாசகர்களும் எழுத்தாளர்களும் முன்வைத்த கேள்விகளுக்கு பதில் சொன்னதோடு தான் எழுதிய சிறுகதை குறித்தும் சிலவற்றைப் பகிர்ந்து கொண்டார். அவரும் நன்றி.



இன்றைய நிகழ்ச்சி, அதுவும் இன்று நமக்கு 30வது கலந்துரையாடல். இலக்கிய செயல்பாடுகளில் எண்ணிக்கைக்கு பெரிய கவனம் தேவையில்லை என்றாலும் இதுவரை வருவதற்கு உறுதுணையாக இருக்கும் எழுத்தாளர் தம்பி பிருத்வி ராஜுவிற்கு நன்றி.


மீண்டும் அடுத்த வார திங்கட்கிழமை மற்றொரு சிறுகதைக் கலந்துரையாடலில் சந்திப்போம்.

சிறகுகளின் கதை நேரம்; இது எழுத்தாளருக்கும் வாசகருக்குமான உரையாடல் களம்.


உரையாடுவோம்... கலந்துரையாடுவோம்...


அன்புடன் #தயாஜி 

#சிறகுகளின்_கதை_நேரம் #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்