பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூலை 04, 2024

🌹செந்தமிழ் விழா 2024🌹



மீண்டும் செந்துல் , கான்வெண்ட் இடைநிலை பள்ளிக்கு (SMK CONVENT, SENTUL) சென்றிருந்தேன். 'செந்தமிழ் விழாவின்' நிறைவு நாளும், பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது.


மேலும் சில போட்டிகளை இன்றும் நடத்தினார்கள். இம்முறை மாணவர்களின் 'இளம் நிருபர்'  போட்டிக்கு நானும் , கவிஞரும் ஊடகவியலாளருமான பூங்குழலி வீரனும் ஆசிரியை தனமும் நீதிபதிகளாக இருந்தோம்.


 ஒவ்வொரு மாணவர்களும் தத்தம் திறமையைக் காட்டினார்கள். ஊடகத்துறை மீதான ஆர்வம் இம்மாதிரி போட்டிகள் வழி மாணவர்களுக்கு ஏற்படும் என்பதில் மகிழ்ச்சி.



பிறகு ஒவ்வொரு போட்டியிலும் பங்கெடுத்த மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள். நீதிபதிகளாக பொறுப்பேற்ற எங்களுக்கும் சிறப்பு செய்து நினைவுச் சின்னத்தையும் நற்சான்றிதழையும் வழங்கினார்கள்.


இன்றைய பொழுது மாணவர்களுடன் சிறப்பாக அமைந்தது. வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்த பள்ளி நிர்வாகத்திற்கும் ஆசிரியர் சுலோச்சனாவிற்கும் அன்பும் நன்றியும்...





Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்