பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஏப்ரல் 18, 2020

நண்பா...




     திட்டம் வெற்றி. ராகு முதலில் செல்ல வேண்டும். அவனும் பணமும் முதலில் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதுதான் முக்கியம். பணத்தின் தேவை அவனுக்குத்தான் அதிகம். கேதுவிற்கும் தேவை உண்டு. ஆனால் ராகுவைவிட அதிகமில்லை என அவனே அவனுக்குச் சொல்லுக்கொண்டான்.

    ராகு காலி வீட்டினுள் வந்துவிட்டான். பணப்பையை பதுக்க ஆரம்பித்தான். முன்னமே பேசிக்கொண்ட இடத்தில் பணப்பையை வைக்கும் நேரத்தில் அவனது மனம் சஞ்சலித்தது.

     திட்டம் தீட்டியது ராகு, நேரம் குறித்தது ராகு, முன்னேற்பாடுகள் செய்தது ராகு, காரை வாடகைக்கு எடுத்தது ராகு, எங்கெல்லாம் காமிராக்கள் உள்ளதென தெரிந்துச் சொன்னது ராகு, இப்படி எல்லாவற்றிலும் மூல காரணமாக இருந்தது ராகு. ஒரு 'மோரல் சப்போர்ட்க்காக' வந்த கேதுவிற்கு எதற்கு இவ்வளவு பணம் கொடுக்க வேண்டும்.

 பணத்தை வேறு இடத்தில் பதுக்கினான். பணம் செய்வதாக சொல்லும் பத்தில், துரோகமும் சேர்ந்ததுதானே. இன்னும் கொஞ்ச நேரத்தில் கேது வந்துவிடுவான். உள்ளே வந்தவன் ஓய்வெடுக்க நாற்காலியில் அமர்வான். நிச்சயம் கண்களை மூடுவான். அந்நேரம் பக்கத்தில்  மறைத்து வைத்திருக்கும் இரும்பை எடுக்கவேண்டும். கேதுவின் தலையில் ஒரே போடு. இங்கு ஒருவன் செத்துக்கிடப்பது நாற்றம் வந்தால்தான் வெளியில் தெரியும். அதற்குள் ராகு எங்கே போய்விடலாம்.

    கேது, வெளியில் நிலமை சரியாகும் வரை காத்திருந்தான். அவ்வப்பொது தகவல்களை ராகுவிற்கு சொல்லிக்கொண்டிருந்தான். யாரும் ராகுவை பின் தொடர்ந்து வாராதை உறுதி செய்துவிட்டான். விபரத்தைச் சொல்ல கேதுவை ராகுவைத் தொடர்பு கொள்ள, கிடைக்கவில்லை.
ஏதோ நடந்துவிட்டதாக மனதில் படுகிறது. ராகுவிற்கு எந்த ஆபாத்தும் வந்துவிடக்கூடாது என வேண்டிக்கொண்டான். புறப்பட்டான்.

    ராகுவிற்கு அந்த சத்தம் கேட்டுவிட்டது. யாரோ வந்துக்கொண்டிருக்கிறார்கள். எச்சரிக்கையானான். வாசல் அருகில் கையில் எதையோ வைத்துக்கொண்டு நிற்கிறான். ஆளில் அசைவு தெரிகிறது. இந்த கேதுவை கொல்வதற்கு முன்பாக இன்னொரு கொலை செய்ய வேண்டியுள்ளதே என பற்களைக் கடித்துக் கொண்டான். நல்லவேளையாக அதற்கு வாய்ப்பில்லை. வந்துக்கொண்டிருந்தது கேதுதான். வாசலுக்கு வந்த விட்டான்.

    கதவை திறப்பதற்கு முன்பாக கேது தன்னை யாரும் பின் தொடர்ந்தார்களா என பார்த்துக்கொண்டான்.ராகுவும் நாற்காலிக்கு அருகில் அந்த இரும்பு இருக்கிறதா என பார்த்துக்கொண்டான்.
குறிப்பு சத்தத்தை கேது கொடுக்கிறான். ராகு கதவை திறந்துவிட்டு முன்னே நடந்துச் செல்கிறான். அப்போது;

'படார்....!!!!!!!'

   எதாலோ அடிபட்டு, பின் மண்டை உடைந்து ராகு கீழே விழுந்து துடித்துக் கொண்டிருக்கிறான்.

- தயாஜி


Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்