பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஏப்ரல் 29, 2020

ஸ்படிக கிரீடக்காரி

கனத்த மழையின் நாளொன்றில் நினைவிருக்கிறதா நாம் சந்தித்துக்கொண்டோம் அது சந்திப்புதானா என முழுமையாய் புரியவில்லை வேறெந்த பெயர் வைக்கவும் தெரியவில்லை தைரியமுமில்லை உன்னிடம் மட்டும் ஒரு குடை மழையில் தன்னை நனைந்துக் கொண்டிருந்தது பிரபஞ்சத்தின் கண்டுபிடிப்பாய் உனக்கு ஸ்படிக மழைத்துளிகளின் கிரீடம்...

ஏப்ரல் 27, 2020

'எனக்கொரு வாய்ப்பு கொடு அன்பே என் நட்பே'

வாழ்ந்துவிட்டு போங்கள்  என்கிறேன் பார்த்துவிடவும் வேண்டாமென மறைகிறேன் கண்டுக்கொள்ளக்கூடாது என கவனம் கொள்கிறேன் உங்கள் போலிபுகார்களை காதில் நுழையாமல் தடுக்கிறேன் உங்களால் இழந்துவிட்டவைகளை  நானே கடன்களாக சுமக்கிறேன் உங்கள் பச்சை  துரோகத்திற்கு வெண்மை பூசுகிறேன் உங்கள்...

ஏப்ரல் 25, 2020

மந்திரக்காரி

நீ வரைவதற்கு கொடுத்திருந்த காகிதங்களைக் காணவில்லை வைத்த இடம் நினைவில் உண்டு காகிதங்களைக் காணவில்லை வரைவதற்கு நான்  என்னை தயார்படுத்தித் திரும்புகையில்  காகிதங்கள் காணவில்லை உன்னை எப்படி நம்பவைப்பது இதோ இங்குதான் நீ கொடுத்தாய் இதோ இங்குதான் நான் வாங்கினேன் இதோ இதோ இங்குதான் நான் வைத்தேன் உன்...

ஏப்ரல் 24, 2020

கண்மணி அன்போடு காதலன்

   'கண்மணி அன்போடு காதலன்'           கே.கவி நந்தன் இயக்கிய டெலிமூவி. நேற்றைய இரவு கண்மணியோடும் காதலோடும் கடந்தது.   தலைப்பிற்கு ஏற்ற படம். சொல்லப்போனால் தலைப்புதான் முழு கதையுமே. ஆண்கள் தொட்டாலே மயங்கும் விழுந்துவிடும் விசித்திர நோய் கொண்டிருக்கிறார்...

தற்காலிகத் தனிமை

       இன்னும் இரண்டு வாரங்கள். நேரலையில் பிரதமர் பேசி முடிக்கப்போகிறார். சுகுமாறனுக்கு அது மன உளைச்சலைக் கொடுத்தது. சுகுமாறனுக்கு மட்டுமா? சுற்றுவட்டார மாறன்கள் அனைவருக்கும்தான். முகநூலில் பலர் பதிந்த புலம்பல் போலவே தானும் பதிவு போட்டார்.          பெரிய...

'அவளும் என் கவிதைகளும்'

உன்னால் என் கவிதைநூலுக்கு என்ன கொடுக்கமுடியுமென்பதே விவாதம் எதுவும் பேசவில்லைஎழுந்தாள்என் கவிதை நூல்களைஒன்றின் பின் ஒன்றாக கோர்த்தாள்படுத்தவாக்கில் ஆளுயர நீளமாய் தெரிந்தனமெல்ல முன் நகர்ந்தாள்வெறுமனே நகரவில்லைஒவ்வொரு அடிக்கும்நூல்களின் முகப்புகளைத்தடவிக்கொண்டே போனாள்தலை நூலை மட்டும்சில நொடிகள்...

புத்தகவாசிப்பு_2020_9 ‘ஆதி. இராஜகுமாரன் சிறுகதைகள்’

#புத்தகவாசிப்பு_2020_9  ‘ஆதி. இராஜகுமாரன் சிறுகதைகள்’ புததகம் –ஆதி. இராஜகுமாரன் சிறுகதைகள்’ எழுத்து – அதி. இராஜகுமாரன் பதிப்பகம் – மழைச்சாரல் (மலேசியா)        மலேசிய பத்திரிக்கைத் துறையில் எப்போதும் நினைவில் கொள்ளும் பெயர்களில் இவர் பெயரும் அடங்கும்....

ஏப்ரல் 22, 2020

நன்றாக இருங்கள்

       யாஹூ என்னும் மின்னஞ்சல் முகவரி உங்கள் யாரிடமும் இருக்கிறதா. அதன் நினைவாவது உள்ளதா ?. என்னிடமும் இல்லை. நேற்றுவரை.        எனது பழைய நண்பன் ஒருவனை சந்தித்திருந்தேன். உரையாடலின் முடிவில் ‘யாஹு இ-மெயிலை நீயாவது வச்சிருக்கயா இல்ல...

ஏப்ரல் 20, 2020

மது மாது சூது....

     குழப்பம். நடப்பதை கவனித்துக் கொண்டே இருந்தான். இன்னமும் போதை தெளியவில்லையா என்று தன்னைத்தானே கேட்டும் கொண்டான். வேறு வழியில்லை. கேட்டுவிடுவதுதான் சரி. “செல்லம்…” “சொல்லுங்க…” “கேட்கறேன்னு தப்பா எடுத்துக்காத..?” “தப்பா எடுத்துகிறதுக்கு என்ன இருக்கு.. கேளுங்க..”  ...

பொண்டாட்டி சாபம்

   மெல்ல நினைவை இழந்துக் கொண்டிருந்தான். செல்வனுக்கு அந்த கடைசி நினைவுகள் மட்டுமே இப்போது இருந்தன. தலையில் பலத்த காயம். மருத்துவர்கள் இனி காப்பாற்றுவது கடினம் என சொல்லிவிட்டார்கள்.       அவளின் சாபம் இத்தனை வேகத்தில் பலிக்கும் என அவளும்தான் நினைக்கவில்லை. அவர்களின்...

ஏப்ரல் 19, 2020

புத்தகவாசிப்பு_2020_8 ‘நீலலோகிதம்’

        நாம் வாசிப்பதற்கான கதைகளை நாமே தேர்ந்தெடுக்கின்றோம். இது எந்த அளவிற்கு உண்மையோ அதே அளவிற்கு, கதைகளையும் அதற்கான வாசகர்களைத் தேர்ந்தெடுத்துவிடுகின்றன. நாம் வாசிக்கின்ற கதைகள் நமக்கு பிடிக்கின்றதா இல்லையா என்பதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் முதன்மையாக...

ஏப்ரல் 18, 2020

நண்பா...

     திட்டம் வெற்றி. ராகு முதலில் செல்ல வேண்டும். அவனும் பணமும் முதலில் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதுதான் முக்கியம். பணத்தின் தேவை அவனுக்குத்தான் அதிகம். கேதுவிற்கும் தேவை உண்டு. ஆனால் ராகுவைவிட அதிகமில்லை என அவனே அவனுக்குச் சொல்லுக்கொண்டான்.     ராகு காலி வீட்டினுள்...

ஏப்ரல் 17, 2020

சமையல்

இன்னும் கொஞ்ச நேரத்தில் சமையல்  முடிச்சிடலாம் அதுவரை பொறுக்க வேண்டுமே அந்த ஆப்பிள் அத்தனை பெரிதாக இருக்கிறது அதன் வண்ணத்திற்கும் ருசிக்கும் சம்பந்தம் உண்டோ சில வாழைப்பழங்கள் சில டுரியான்கள் போதுமா போதாது வெறும் பழம் தின்னால் தீருமா பசி தீராதே பெரிய பானை அதனுள் அரிசி எப்போது எரியும் விரகடுப்பு பக்கத்தில்...

ஏப்ரல் 16, 2020

புத்தகவாசிப்பு_2020_7 ‘அபிதா’

        இப்படி ஒரு கதைச் சொல்லல் சாத்தியமா என வாசித்து முடித்ததும் தோன்றியது. முற்றிலும் நனவோடையில் சொல்லப்பட்டுள்ள கதை. லா.ச.ராமாமிருதத்தின் வாசிக்க வேண்டிய புததகம் என  பல எழுத்தாளர்கள் முன்மொழிந்த படைப்பு.       வாசிக்க...

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்