பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜனவரி 07, 2020

'புன்னகை மட்டும் போதுமெனக்கு' வாசித்தவர் பார்வை 2


 புன்னகை மட்டும் போதுமெனக்கு  சிறுகதைக்கு வந்திருக்கும் வாசகப்பார்வை



இரா.சண்முகநாதன் நடேசன்
மலேசியா 


வாசித்தேன். முதலில் குழப்பம். ஒவ்வொரு சூழலையும் ஆசிரியர் நியாயப்படுத்திக்கொண்டே வருமின்றாரோ என்ற கேள்வி என்னுள் எழ, 'செல்வி தான் வசிக்கும் இடத்தில் கூட தன்னைக் காட்டிக்கொள்ள விரும்பவில்லை' என்பது போன்ற செயல்கள் நெருடலைத் தந்தாலும் அவள் அமைதியும் அடக்கமும் கொண்ட பண்பாடு மிக்கவள் என பதிலளித்துக் கொண்டு வாசிப்பைத் தொடருகின்றேன்.


வசதிமிக்க வசிப்பிடத்தில் வசிக்கும் அளவுக்கு வசதி படைத்த அவர்களுக்கு , குழந்தைகளை வீட்டிலேயே ஆள்வைத்துப் பராமரிக்க பணமில்லையா அல்லது மனமில்லையா என்ற கேள்வி எழும்போது, அதனையும் ஆசிரியர் " இன்றைய பரபரப்பு சூழலில் குழந்தைகளை காப்பகத்தில் வளர்ப்பதே பாதுகாப்பானது " என்ற வரிகளின் வரிகளின் வாசிப்பைத் தொடரச் செய்கிறார்.

குழந்தையைக் காணச் செல்லும் இடத்தில்,பெற்றோரைக் கண்டதும் கையுடைந்த பொம்மையை போர்த்தித் தூங்கச் சொல்லி வரும் வரிகள், சகாயம் செல்வி போன்று பிள்ளைகளைக் காப்பகத்தில் வளர்க்கும் பெற்றோர்களுக்கு கொடுக்கும் சாட்டையடியாக நான் கருதுகிறேன். பெற்றோர்கள் இருந்தும் காப்பகத்தில் வளரும் குழந்தைகள் அனைவருமே கையுடந்த பொம்மைகள் என்று சொல்லாமல் சொல்ல வருகின்றார் ஆசிரியர்.

பொம்மையை தூங்கச்சொல்லி விட்டுப் பின் குழந்தை பெற்றோரைக் காண வரும்போது ஆங்கே கதையின் தலைப்பு அவிழ்த்து விடப்படுகின்றது.

இருந்தும் குழந்தையை காப்பகத்தில் வளர்க்க வேண்டிய காரணம் என்ன எனும் கேள்வியும் பின் தொடர்ந்தே வருகின்றது. அதற்கு சீனக்கிழவி தற்காலிக விடை தருகிறாள். அடிக்கடி மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளவும் மற்றும் இரண்டு மாதங்களில் எல்லாம் சரியாகி விடும் எனும் வரிகள் செல்வி ஒரு நோயாளி என்று வாசிப்பவர்களை முடிவெடுக்க வைக்கின்றார்.


சிறுகதை எழுத்தாளரின் ஆற்றலே அவர் எடுக்கும் முடிவில் தான் உள்ளது.பல கதைகளில் எழுத்தாளனின் கதையை வாசித்து முடிக்கும் முன்னே வாசகன் முடிவுக்குக் கொண்டு வந்து விடுகின்றான். சில படைப்பாளர்கள் மட்டுமே எதிர்பாராத முடிவுகளோடு வாசவனை நெகிழச் செய்து விடுகின்றனர்.அவர்களில் தயாஜியும் ஒருவர் எனலாம்.மிஸ்டர் லிம் 4-ன் மூலம் செல்வி ஈடுபட்டிருக்கும் தொழிலை கோடிகட்டி நமது ஊகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கின்றார்.


பிரிகபீல்ஸ் வட்டார சிவப்பு விளக்குப் பகுதிகள் மூடப்பட்டு விட்டன எனும் தகவலின் வழி சகாயம் புலம்ப, சீனக்கிழவி அடிக்கடி மருத்துவப் பரிசோதனை செய்யச் சொன்னதன் வழி செல்வியின் தொழிலைப் பற்றிய அதர்ச்சியை அவிழ்த்து விடுகின்றார் ஆசிரியர்.
செல்வி உள்ளுக்குள் புன்னகைத்தாள். இனி அவளுக்குத் தன் குழந்தையை மட்டுமே கட்டியணைக்கும் பணி.இனி யாருக்கும் அஞ்ச வேண்டாம் என்பதை உணர்த்தும் வரிகளில் கதையின் தலைப்பு மிளிர்கிறது. இருந்தும் இக்கதையில் வரும் பாத்திரங்களான சகாயமும் செல்வியும் ஒருவகையில் நோயாளிகளே. ஆம் மனநோயாளிகள். பல வழிகள் இருந்தும் இம்மாதிரியான இருளில் வாழ்வை இழந்து வளத்தத்தேடும் நோயாளிகள். இவர்களின் தேடல் தீராது; தொடரும் எனும் எதார்த்தத்தை சகாயம் 'மிஸ்டர் லிம் 3-க்கு தொடர்பு கொள்வதன் வழி ஆசிரியர் மெய்ப்பிக்கின்றார்.

குறிப்பு;
அல்ட்ராமேன் கையால் காட்டும் சிலுவைப் போன்ற குறியால்.. எனும் வரிகளால் கதைக்கு எந்த முன்னேற்றமும் இல்லை.
நன்றி.
இரா.சண்முகநாதன் நடேசன்






Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்