பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜனவரி 07, 2020

'புன்னகை மட்டும் போதுமெனக்கு' வாசித்தவர் பார்வை 1

 புன்னகை மட்டும் போதுமெனக்கு  சிறுகதைக்கு வந்திருக்கும் வாசகப்பார்வை


கலை இளங்கோ (படைப்பாளர்)
சிங்கப்பூர்

தங்களது முழு கதையையும் படித்தேன். 
சரி கதைக்கு வருவோம். ஒவ்வொரு எழுத்தாளரின் முயற்சியும் மதிக்கத்தக்கது. தங்களது முயற்சிக்குப் பாராட்டு!
மலேசியாவின் கோலாலம்பூர் பகுதி வாகன நெரிசல் கண்முன்னே வந்து போனது. இயல்பான விஷயங்களைக் கதையில் கூறியது சிறப்பு தான். இருந்தாலும் கதையில் சில இடங்களில் மயக்கம் தென்பட்டது. ஏன் குழந்தை தனியாக இருக்கிறது? அந்த கணவனுக்கு வேறு என்ன சிக்கல் ? பணத்தின் மீதுள்ள மோகம் குழந்தையின் தந்தையை ஆட்கொண்டு விட்டது போல. மலாய் மொழி சொற்களின் மணம் வீசும் தருணம் மலேசியா மண் வாசனையைத் தூக்கி விட்டது. பெண்கள் இருவரும் என்ன பெரிசா பேச போகிறார்கள் என்று மட்டமாக எண்ணும் உள்ளங்களுக்குச் சவுக்கடி காத்திருக்கிறது.



Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்