பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜனவரி 28, 2022

- புலியொன்றின் நன்றி நவில்தல் -


    எங்கள் மீது கருணை காட்டியமைக்கு நன்றி. நீங்கள்தான் எங்கள் பசியைப் புரிந்து கொண்டீர்கள். உங்களையா இவர்கள் திட்டுகிறார்கள். உங்களையா இணையத்தில் கிழித்துக் கொண்டிருக்கிறார்கள். மூளை இல்லாதவர்கள். அவர்கள் எங்கள் இனத்தையும் எங்கள் பசியையும் தெரிந்து கொள்ளாதவர்கள்.

    அடர் காடுகளில் எங்களால் வாழ முடியவில்லை. துள்ளி ஓடும் மான்களை ஓடி பிடிக்க மரங்கள் தடையாக இருக்கின்றன. ஆமாம் அது எங்கள் ஓட்டத்தின் பெருந்தடை. நீங்கள் வெட்டி விற்கும் மரங்களால் எங்கள் உணவுப்பாதையில் தடைகள் இருக்கவில்லை.

    பாய்ந்தோடும் இறையைப் பாயாமலேயே பிடித்து தின்ன நீங்கள் அழிக்கும் காடுகள் உதவுகின்றன. தூரத்தில் மேயும் எந்த மானையும் பார்ப்பதற்கு உயர்ந்த மரங்கள் மறைக்கின்றன. அதைத்தானே வெட்டுகிறீர்கள். பிறகு ஏன் திட்டுகிறார்கள். தைரியமாக இருங்கள்.

    அடுத்ததாக நீங்கள் சொல்லவிருக்கும் 'மழையில், வெள்ளம் வருவது மீன்களுக்கு நல்லது' என்னும் பத்திரிகை சந்திப்பில் 'காடழிப்பது புலிகளுக்கு நல்லது' என்று நீங்கள் சொன்னதை மறந்துவிடுவார்கள்.





#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
#வெள்ளைரோஜா_பதிப்பகம்
#குறுங்கதை

2 comments:

Nedunilam சொன்னது…

நிகழ்கால பிரச்சினையைக் குறுங்கதையாக்கும் பாங்கு அருமை. வாழ்த்துகள்.💐🥰

Unknown சொன்னது…

அருமை அண்ணா

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்