பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜனவரி 01, 2022

- அமுதாவிற்கான ஆய்வேடு -



மீண்டும் அதே துர்நாற்றம். எவ்வளவுதான் செலவு செய்வது. இன்னும் எத்தனைப் பேரைத்தான் பார்ப்பது.  ஒவ்வொரு  முறையும் வீட்டு வாசலைத் தாண்டும் போதுதான் இந்த துர்நாற்றம் அமுதாவை தாக்கும்.

முதலில் லேசாகத்தான் உணர்ந்தாள்.  பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.நாட்கள் செல்லச்செல்லவும்தான் அதன் விபரீதத்தைப் புரிந்துகொண்டாள்.

வாசலைத் தாண்டியதும் தாக்கும் அந்த துர்வாடை மீண்டும் வீட்டிற்கு வந்ததும் மாயமாய்ப்போகும். தன்னை வீட்டிலேயே கட்டிப்போட நினைக்கும் யாரோ ஒருவர்தான் இதற்கு காரணம் என அமுதாவின் மனம் சொன்னது. அதன் உண்மையை அவள் தேடலானாள்.

மருத்துவமனையைத் தொடர்ந்து மந்திரவாதிகள் வரை பார்த்தாயிற்று ஒன்றும் நடக்கவில்லை. ஆனால் என்னிடம் ஒரு வார்த்தைக் கூட கேட்கவில்லை. கேட்டிருந்தால் ஒரே வரியில் சிக்கலைத் தீர்த்திருப்பேன். ஓர் எழுத்தாளனிடம் இல்லாத தீர்வா?

சரி என்னிடம் கேட்டால் என்னதான் சொல்லியிருப்பேன்.
" அமுதா... அந்த பழைய மாஸ்க்கை தூக்கிப்போட்டுட்டு புது மாஸ்க் வாங்கு..."

#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
#வெள்ளைரோஜா_பதிப்பகம்

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்