பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

மார்ச் 22, 2020

சிரிக்கும் பொம்மை




      காலை மணி 8.00. சாமியாரும் அவரது சிஸ்யர்களும் வரவேண்டிய நேரம். முன்னமே குறிப்பிட்ட பொருட்கள் தயாராய் உள்ளன. இனியாவது நிம்மதியாக வாழலாம் என சூர்யாவின் குடும்பம் நினைத்தது. சில நாட்களாக ஏதேதோ நடந்துவிட்டது. குடும்பம் மொத்தமும் நடுங்கிக்கொண்டு இருக்கிறார்கள். உறவினர் ஒருவரின் ஆலோசனைப்படி சாமியார் அறிமுகமானார்.

   மறுநாள், சாமியாரைச் சந்திக்க சென்றிருந்த சூரியாவிற்கு அதிர்ச்சி. சூர்யாவின் வீட்டில் நடந்த ஒவ்வொன்றையும் சூர்யாவிடமே சொல்லிக்கொண்டிருந்தார் சாமியார். நன்கு பழக்கமான யாரோ ஒருவர் வைத்த சூனியம்தான் காரணம் என்பதை கண்டரிந்தார். உடனே நிவர்த்திக்கு என்று சில பரிகார பொருட்களைச் சொல்லி தாமதித்தால் ஏற்படும் விளைவுகளையும் முன்கூட்டியே சொல்லிவிட்டார்.

  இன்றே வரமுடியுமா என கேட்டதற்கு, சாமியார் கண்கள் மூடி எதையோ யாரிடமோ கேட்டுக்கொண்டிருந்தார். கண்கள் திறந்தவர். அத்தனை சாதாரண காரியம் அல்ல, முதல் நாள் சில முன் ஏற்பாடுகள் செய்ய வேண்டியுள்ளது. முடிந்தவுடன் மறுநாள் வீட்டிற்கு வருகிறேன் என்றார்.

     மறுநாள், வீட்டு வரவேற்பறையில் பூஜை அமர்க்களமாக நடந்தேறியது. கண்கள் மூடி தியானம் செய்திருந்த சாமியார், சட்டென எழுந்தார், தனது சிஷ்யபிள்ளையும்  அழைந்துக்கொண்டு வீட்டு பின்புறம் வேகமாக நடந்தார்கள்.

      சிஷயன் அவரை மிகச்சரியாக ஓரிடத்தில் நிறுதினான். தோண்டும் படி சைகை செய்தார். எல்லோரும் பரபரப்பானார்கள். காற்றின் வேகம் கண்களுக்கு தெரிந்த மரம் செடிகளை அசைத்துக்கொண்டிருந்தது. சாமியார் மந்திரத்தை சத்தமாக ஜபிக்கத் தொடங்கினார். குழி தோண்ட ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில், சிஷ்யனுக்கு ஏதோ தட்டுப்பட்டது. ஜபித்துக்கொண்டே சாமியார் சிஷ்யன் தோண்டிய குழிக்குள் கைகளை விட்டார்.

      முதல் நாள் இரவு யாருக்கும் தெரியாமல் வைத்த ஊசி குத்திய பொம்மையை, இன்று எல்லோர்க்கும் தெரியும்படி எடுத்தார் சாமியார். ஆனால் அங்கு ஒரு பொம்மைக்கு பதிலாக இரண்டு பொம்மைகளும் உடன் இன்னும் சில ஆணிகளும் இருந்தன. அதில் ஒன்று அந்த சாமியாரைப் பார்த்து சிரிக்கத்தொடங்கியது. சாமியார்…..

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்