பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

மார்ச் 30, 2020

#கதைவாசிப்பு_2020_15 'ஓணான்கள்'





#கதைவாசிப்பு_2020_15
கதை – ஓணான்கள்
எழுத்து – அம்ரிதா ஏயம்
புத்தகம் – விலங்குகள் தொகுதி ஒன்று அல்லது விலங்கு நடந்தைகள்
(சிறுகதை தொகுப்பு)


     காலந்தோரும் ஏதோ ஒரு வகையில் யுத்தங்கள் இருக்கத்தான் செய்கின்றன. யார் யுத்தம் செய்கிறார்கள். யாருக்காக யுத்தம் செய்கிறார்கள் என்கிற கேள்விக்கு இன்று வரை நிலையான பதில் கிடைக்கவில்லை. யுத்தம் தொடங்கியப் போது கொடுத்த பதிலுக்கும் யுத்தம் முடிந்தப் பின் நமக்கு  கிடைக்கும் பதிகளுக்கும் சமயங்களில் துளியும் சம்பந்தங்கள் இருப்பதில்லை.

      ஆனால் அது விட்டுச்செல்லும் துயரங்கள் இழப்புகள் அழிவுகள் எல்லாம் ஒன்றாகத்தான் இருக்கின்றன. ராஜராஜாக்கள் தொடுத்த போர் முதல் உலக யுத்தம், இன்றும் நம்மை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ‘நவீன பயோவார்’ என எல்லாவற்றையும் எழுத்துகளாக பலரும் பல இடங்களில் பதிவு செய்துக் கொண்டேதான் இருக்கிறார்கள். அடுத்த தலைமுறைக்கு நாம் விட்டு செல்வதற்கு நம்மிடம் மிச்சம் இருக்கப்போவது என்னெவென்ற கேள்விகளின் குழப்பங்கள் சூழந்த வாழ்வும் சூழலும் நம்மை தள்ளிவிட்ட நிலையில் வரலாறுகளை திரும்பிப்பார்க்கையில் அதற்கான தீர்க்கத்தரிசனம் கிடைத்தாலும் கிடைக்கலாம்.

     யுத்தங்கள் செய்து வைத்த மானுட துரோகங்களை வாசிக்கையில் மனம் வலிக்காமல் இருப்பதில்லை. அப்படி ஒரு கதைதான் ஓணான்கள்.

    ஓணான்களை பிடித்து ஆய்வு செய்யும் மாணவன். அவனுக்கு ஓணான்களை பிடித்துக் கொடுக்கும் ஒரு நண்பன். ஓணானை பிடித்து அதனை பீடித்திருக்கும் ஒட்டுண்ணிகளை தனியே  எடுப்பதுதான் அந்த ஆராய்ச்சி. ஓணான்களில் உடலில் ஆங்காங்கு பீடித்திருக்கும் ஒட்டுண்ணிகளைப்போலவே நாட்டையும் பல வகைகளில் ஒட்டுண்ணிகள் பீடித்திருப்பதை கதையில் மிக எதார்த்தமாக கதாசிரியர் சொல்லியுள்ளார்.  

   ஓணான்களை கேட்பனும் ஓணான்களை பிடிப்பவனும் வாழ நிர்பந்திக்கப்பட்ட இரு வெவ்வேறான இடங்களும் அதில் அவர்களுக்கு கிடைக்கும் வசதி வாய்ப்புகளும் வாசிக்கையில் பரிதாபப்பட வைக்காமல் இல்லை. ஓணானை பிடித்து தரும் ‘சின்னான்’, யுத்தத்தில் தனக்கானவர்களை இழந்தவன். யுத்தம்  எவ்வாறான விளைவுகளை அவனுக்கு ஏற்படுத்துகிறது என்பதுதான் கதை. அதனை  மிக எதார்த்தமாக சொல்லியிருக்கிறார். இதே சிறுகதை தொகுப்பில்  இருந்த ‘கிருஸ்ணம்பிள்ளை’ என்கிற கதையும் கூட யுத்ததிற்கு பிறகே சிறுவர்களுக்கு ஏற்படும் சிக்கல்களை சொல்லியுள்ளது. முன்னமே அக்கதை குறித்து எழுதியுள்ளேன்.
    
  இன்னும் எத்தனை கதைகள், எத்தனை பேர் யுத்தங்கள் குறித்தும் அதன் விளைவுகள் குறித்தும் எழுதிக்கொண்டிருக்கப்போகிறார்கள். எனக்கூட ஒரு முறை நண்பர் கேட்டு குறைபட்டுக் கொண்டான். அவரைப் பொருத்தவரை கதைகள் வெறும் வாசிப்பு அனுபவத்திற்கு மட்டும்தான். எல்லோர்க்கும் அப்படியிருக்க வேண்டிய அவசியம் இல்லையே. நாம் எந்த சூழலில் வாழ்ந்து வந்தோம் வாழ்கிறோம் என்பதை, இப்படியெல்லாம்தான் அடுத்த பல தலைமுறைகளுக்குச் சொல்லவேண்டியுள்ளது.

-       தயாஜி


1 comments:

Yarlpavanan சொன்னது…

சிறப்பு

www.ypvnpubs.com

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்