பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பிப்ரவரி 18, 2014

ரெண்டுகால் பூச்சியும் எட்டுகால் மனிதனும்

ரெண்டுகால் பூச்சியும் எட்டுகால் மனிதனும்

    அந்த எட்டுகால் பூச்சியை அப்போதே நசுக்கியிருக்க வேண்டும். செய்யவில்லை. தவறுதான். இனிமேலும் ஏதும் செய்ய இயலாது. கை வலிக்கிறது.
    படித்தும் வேலை இல்லாதவன் எங்கும் வேலை செய்வான் தானே. நானும் அப்படித்தான். ஒருவேளை நான் படித்தவன் என்பதால் கூட வேலையில்லாதவனாக இருக்கலாம்.  ஆனால் வேலை அவசியம். என் நிலை அப்படி. முன்பெல்லாம் கேள்விகளுக்கு பதில் சொன்னால்தானே வேலை கொடுப்பார்கள். இப்போதும் அப்படித்தான் என்கிறீர்களா. சரி சொல்லுங்கள் ஆக கடைசியாக நீங்கள் எப்போது வேலை கேட்டீர்கள். அதான் நேர்முகத் தேர்வுக்கு சென்றீர்கள். ஓராண்டுக்கு முன்பு? ஈராண்டுக்கு முன்பு? ஐந்தாண்டுக்கு முன்? இருக்கலாம். எப்படியும் ஐந்தாண்டுகளுக்கு மேலாகவும் இருக்கலாம். சரியா. என்னமோ நேற்று வேலைக்கு சென்று, பதிகளைச் சொல்லி, வேலை கிடைத்ததும், இன்று வேலைக்கு கிளம்பும் தோணியில் நீங்கள் பதில் சொல்லியிருந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.
   நான் இன்றைய நாளோடு இரண்டாவது ஆண்டாக நேர்முகத் தேர்வுக்கு செல்கிறேன். எப்படி அவ்வளவு துல்லியக் கணக்கு என்கிறீர்களா..? யோசிக்கிறீர்களா..? காலையில்தான் அப்பா பஜனை பாடினார். “இன்னையோடு ரெண்டு வருசமா தண்டச்சோறு சாப்டறடா..” என்றார். பதில் ஏதும் பேசவில்லை. கேள்வி மட்டும் கேட்க நினைத்தேன். வேலை இல்லாதவன் என்ற ஒரு காரணத்துக்காக, வாசலில் யாரும் வந்திருந்தால் நான் தான் போய் பார்க்கனும். தபாலைக் கூட நான் தான் வாங்கனும். கூரைக்கு கீழ் சுற்று காத்தாடி முதல், தரை மேல் தூசியிருந்தாலும் நான் தான் வசைப் பாடப்படுவேன்.
அப்பா,
“ஏண்டா சும்மாதானே இருக்கே , அந்தா காத்தாடியை சுத்தம் செய்யேன்”
அம்மா;
“ஐய்யா இப்பதான் பார்த்தேன், மிளகாய் முடிஞ்சிருச்சி.. பக்கத்து கடைக்கு போய் வாங்கிட்டு வந்திடறயா..? சமைக்கனும்... சீக்கிரம்ம் வந்திடு..” (பக்கத்து கடை என்பது, வீட்டில் இருந்து அரை மணிநேரம் நடக்கவேண்டும் அதிலும் நான் நடந்தே போகவேண்டும்)
அண்ணன்;
“இந்த இந்த சட்டையை அயன் செய்திடு, அன்னிக்கு மாதிரி அங்கொன்னும் இங்கொன்னும் மாதிரி செய்துடாத.. எனக்கு வேலைக்கு மணியாகுது..”
    இந்த அண்ணன்களே இப்படித்தான். அதிலும் எங்க அண்ணன் ஒரு படிமேல. எல்லாரும் ஏமாந்த மொளகா அரைப்பாங்கன்னுதானே  சொல்லுவாங்க, எங்க அண்ணன் மொளகா.. பருப்பு... காய்கறி... இப்படி எதுஎதையோ அரைச்சிடும். அப்படியே நங்கென தலையில் கொட்டதான் ஆசை. முடியாது. வேலை கிடைக்கும்வரைதான் அப்பு உனக்கு மரியாதை. வேலை மட்டும் கிடைக்கட்டும் அப்பு உனக்குதான் முதல் ஆப்பு. அடுத்த ஆப்பு எங்க அப்பாவுக்கு. என்னடா இவன் ஆப்பு கீப்புன்னு அசிங்கமா பேசரானேன்னு நெனைச்சிடாதிங்க. இதுக்கு என் மனசாட்சி. யார் மனசாட்சிதான் நாகரிகமா பேசியிருக்க சொல்லுங்க.
      இன்றும் வேலைக்கு சென்றேன். வேலைக்கு என்றால் வேலைக்கு அல்ல, வேலைக்கான நேர்முகத் தேர்வுக்கு. எப்படியும் வேலை கிடைச்சிடும். எப்படின்னு கேட்கறிங்கலா? எல்லாமே நம்பிக்கைதான். இதை வச்சித்தானே தன்முனைப்பு அந்த முனைப்புன்னு நாட்டுல நிறைஅய் பேரு வேலை செய்ஞ்சு சம்பாதிக்கறாங்க. உடனே கோவப்பட்டு போய்டாதிங்க மீதி கதையை யார் படிப்பா..?
    வழக்கமான நடைபாதையில்தான் அன்றும் சென்றுக் கோண்டிருந்தேன். பாதைதான் பழையது. இங்கு காலை வேலையில் வந்தும் பறந்து இருக்கும் பறவைகள் ஒவ்வொன்றும் புதியவை. ஏன் முதல் பார்த்த பறகைளை மறுநாள் பார்க்க இயலவில்லை. ஒரு வெலை மனிதர்களை ஏமாற்ற பறவைகளும் மாறுநாள்களில் மாறுவேடம் போட்டு உலாவுகிறதோ. இருக்காது, பறவைகள் எல்லாம் நம்ம அளவுக்கு இல்லை. அவை இன்னமும் நல்லவையாகத்தான் இருக்கும் @ இருக்கனும். பறவைகள் என்றது ,எப்போதோ படித்த ஜோக் ஒன்று நினைவுக்கு வருகிறது. ஒருவர் மற்றொருவரைக் கேட்கிறார்,
“இந்த வேடந்தாங்களுக்கு வரக்கூடிய பறவைகள் எல்லாம் எங்கிருந்து வருது தெரியுமா..?”
“தெரியலையே..”
“இதுகூடவா தெரியலை, வேடந்தாங்களுக்கு வரக்கூடிய பறவைகள் மட்டும் இல்லை, எல்லா பறவைகளும் முட்டையில் இருந்தான் வருகின்றன...”
   படித்ததும் சிரிக்கவேண்டும் என்ற கட்டாயம் ஏதும் இல்லை. ஆனாலும் நான் சிரித்து வைத்தேன். இல்லாவிட்டால் வேலையில்லாதர்கள் எப்போதுதான் சிரிப்பது. வீட்டில் சிரிக்கவிட்டால்தானே.
    புதிது புதியாய் வந்திருக்கும் பறவைகளை பார்த்துக் கொண்டே நடப்பதில்தான் எத்தனை சுகம். ஆனால் இன்று பார்வைக்கு அந்த சுகம் முழுமையாகக் கிடைக்கவில்லை.
     ஏதோ காகிதத்துண்டு என் காலடியில் விழுந்ததை எப்படித்தான் பார்த்தேன். தெரிடவில்லை. ஆனால் பார்த்தேன். கையில் எடுக்கும் முன் என் கையில் வைத்திருக்கும் என வண்ணவண்ண சான்றிழ்தல்களை இருக்கமாக பிடித்துக் கொண்டேன். நான் கீழே குணியும் போது என் சான்றிதழ்கள் எதிர்பாராவிதமாய் பறக்கவும், அதை எடுக்கவும், எனக்கு ஒரு பெண்ணின் உதவி கிடைக்கவும், நான் இளிக்கவும், பதிலுக்கு அவளும் சிரிக்கவும், எங்கள் காதல் முழைக்கவும் இப்படியெல்லாம் சினிமாவில்தான் நடக்கும் . ஒருவேளை என் போன்ற அழகான வாட்ட சாட்ட வாலிபனுக்கும் நடக்கலாம்தானே. அதான் ஒரு முன்னெச்சிரிக்கை. வேலை கிடைக்கும்வரை காதலும் வேண்டாம்... மோதலும் வேண்டாம்.
    நல்லவேலையாக என் சான்றிதழ்களை பிலாஸ்டிக்கில் கோப்பில் வைத்திருந்தேன். இல்லையென்றால் எப்போதோ என்  விரல் வியர்வை, சான்றிதழ்களை வீணாக்கியிருக்கும்.
   காலில் பட்ட காகித்தை எடுத்துப் பார்த்த்தில் இன்ப அதிர்ச்சி. ‘வேலைக்கு ஆள் தேவை’ எனும் விளம்பரம். யாரோ வெட்டியிருக்கிறார்கள் . ஆனால் தவறவிட்டுவிட்டார்களே. ஒருவேளை எனக்காகக் கூட வெட்டியவர்கள் இதனை தவறவிட்டிருக்கலாம்.
   என்ன வேலை, அட அறிவியல் கூடத்தில் வேலையா..? உடல் முழுக்க வெள்ளை அங்கியை போட்டுக் கொண்டு ஒரு மூக்கு கண்ணாடியை மாட்டிக் கொண்டு இரண்டு கைகளையும் கால்சட்டைப் பாக்கேட்டுக்குள் விட்டுக் கொண்டு கூன் விழுந்த மாதிரி வேலை செய்யவேண்டுமே. கண்ணாடியென்றது இன்னொரு ஜோக் நினைவுக்கு வருகிறது.
   ஒருத்தருக்கு காதை வெட்டினா கண்ணு தெரியாதாம் அது என்ன? தெரியலையா.. அதாங்க விடையை முதல்லயே சொல்லிட்டேனே.. நீங்க போய் முதல்ல எழுதன தலைப்படி படிச்சி அதான் விடைன்னு புரிஞ்சிக்காதிங்க. அவ்வளவௌ மேல எல்லாம் போக வேண்டாம். இந்து ஜோக்குக்கு மேல போய்  மூக்கு கண்ணாடின்னு இருக்கும் பாருங்க அதை படிச்சிட்டு வாங்க. அதான் விடை. அதுசரி இது என்ன விடுகதையா நகைச்சுவையா? தெரியலை வேலையில்லாததால எதுஎதையோ படிச்சி சிரிக்கும்படி என் நிலமை ஆகிடுச்சி பார்த்திங்கலா. இனியும் அது தொடராது. ஏன்னா எனக்குத்தான் வேலை கிடைக்கப் போகுதே. ஆனா அந்த வெள்ளை அங்கியும் மூக்கு கண்ணாடியும் இருக்கே.....
    அதிலும் எனக்கு வெள்ளையங்கியும் பழைய தாத்தா காலத்து மூக்கு கண்ணாடியையும் கொடுத்தால், பொறுத்தமாக இருக்கும்மோ இருக்காதோ.
     ஒன்னு செய்யலாம். அறிவியல்காரர்கள் எல்லாம் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை. இவர்கள் ஜீன்ஸ் டீ-சர்ட் எல்லாம் போட்டுக் கொண்டும் ஏன் பணியன் கூட போட்டு கொண்டு வேலை செய்யலாம் என புரட்சி செய்திடவேண்டியதுதான். என்ன ஒன்னு தனியா செய்தா எடுபடாது. கூடாவே ஐந்து பேரை சேர்த்துக்குவோம். அப்பறம் ஆளுக்கு ஒரு கட்சியா, என்ன சொன்னேன் ஆளுக்கு ஒரு கட்சியா சொன்னே..! அதை மறந்திடுங்க. ஆளுக்கு ஒரு காட்சியா பிரிஞ்சி போய்ருவாங்க. நேய் வருவதற்கு முன்பே பூனை ஒடிஞ்ச கதைதான். ஆமா பூனையா சொன்னேன் இல்லையில்லை, பூனையில்லை ஒடிஞ்சது பானை.
     அறிவியல் கூடத்தில் வேலை செய்வதில் சம்பளத்தையும் தாண்டிய லாபமும் இருக்கிறது. எனக்கும் எங்க குடும்பத்துக்கும் எந்த நோய் வந்தாலும் நானே மருந்து கொண்டுவந்து கொடுத்திடுவேன். அதிலும் எங்க அண்ணனுக்கும் எங்க அப்பாவுக்கும் வாயே திறக்க முடியாத அளவுக்கு ஏதாவது மருந்து இருக்கா பார்க்கனும். எனக்கும்கூட அடிக்கடி சளி பிடிச்சி ஒழுகுது . மூக்கு சளியை பற்றிகூட ஒரு ஜோக் படிச்சிருக்கேன். சொல்லவா..? வேணாம்ங்க. பாவம் நீங்க. ரொம்பதான் பாடாய் படுத்தறேன் போல. சரி ஜோக்கை விடுங்க. வேலைக்கு வருவோம். சாதாரண வேலையா இது; அறிவியல் கூடத்தில் வேலை.
    ஒருவேளை அறிவியல் கூடத்தில், குப்பை அள்ளும் வேலையோ...? ச்செ ச்சே அதெல்லாம் இருக்காது. இருந்துட்டா என்ன செய்றது? எங்க வேலைன்னு மட்டும் சொல்லுவோம். என்ன வேலைன்னு சும்மா எதையாவது சொல்லிவைப்போம். வந்து பாக்கவா போறாங்க. நாட்டுல அவங்கவுங்களுக்க அவுங்கவுங்க வேலை. அதுவும் இப்போ அங்கயும் இங்கயும் மாறிமாறி கூட்டம் போடறாங்க.. அதுவும் ஒரு வேலையாகிப் போச்சி இப்போ. அதுக்கும் பணமெல்லாம் கொடுக்கறாங்களாமே..? எனக்குத் தெரியலை.
      எப்படியும் இந்த வேலை எனக்குத்தான் என நான் முடிவு செய்துவிட்டேன். கடந்த இரண்டாண்டுகளும் ஒவ்வொரு நேர்முகத் தேர்வுக்கு இப்படித்தான் நினைத்துக் கொண்டு சென்றேன்.கிடைக்கவில்லை. இப்போது மட்டும் எப்படி கிடைக்கும் என நான் இப்படி நம்புகிறேன். ஏதாவது காரணம் இருக்குமோ?
    இருக்குமோ இருக்காதோ... நாம் முயலத்தானே வேணும்.
    அய்யோ, எங்கே இந்த கடித்தில் தொலைபேசி எண்களைக் காணவில்லையே. ஹப்பாடா.. இருக்கிறது ஆ... என்ன இது ஒரு எண் குறைகிறதே. ஏன்யா இந்த விளம்பரத்தை வெட்டின மூதேவி, ஒரு கடித்தையே உன்னால ஒழுங்கா வெட்ட முடியலையே, உன்னையெல்லாம் அறிவியல் கூடத்தில வேலை சேர்த்தா என்ன ஆகுமோ..  அதான் கடவுளா பார்த்து, இல்லையில்லை கடவுளைப் பற்றி பேசக்கூடாது. அறிவியலைப் பொருதவரை எதுவும் அவன் செயல் இல்லை, எல்லாமே அவனவன் செயல்தான்.
   யோசிப்போம்.
    அட ஆமாம்ல்ல, கடைசி எண்தானே இல்லை. ஒன்றில் இருந்து ஒன்பது வரை இருப்பதே ஒன்பது எண்கள்தானே . ஒவ்வொரு எண்ணையும் கடைசி எண்னாக வைத்து அழைத்துப் பார்க்கலாமே. யோசிக்கிறீர்கள்தானே ஒன்றில் இருந்து ஒன்பது வரை ஒன்பது எண்கள் இருந்தாலும், கடைசியாக இருக்கும் பூஜ்ஜியத்தையும் சேர்க்கவேண்டுமே. என்ன..? பூஜ்ஜியமா..! தமிழ்த்தாயே ஐ ம் சாரி, பூஜ்ஜியம் என சொல்லிவிட்டேன். நியாயமாக சுழியம் என்றுதானே சொல்லியிருக்கவேண்டும். ஒன்ஸ் எகைன், ஐ சாரி மை டியர் தமிழ்த்தாயே. 
   எப்படியும் உடனே அழைத்துப் பேச வேண்டும். வேலை கிடைப்பது என்ன சும்மாவா. அதுவும் அறிவியல் கூடத்தில் வேலை. இப்போதே கற்பழிக்காத பொது தொலைபேசியைத் தேடவேண்டும்.
    இவ்வளவு பேசறவன்கிட்ட போன் இல்லையான்னு யோசிக்காதிங்க. பழைய மோடல் நோக்கிய போன். இருக்கு. அதாங்க தரையில் விழுந்தாலும் தரையை சிமண்டை உடைத்து , அப்படியே இருக்குமே அந்த போன்தான். என்ன போனிருக்கு, பணமில்லை. வேலைவெட்டி இல்லதவனுக்கு சோறும் போனுமே தண்டம் எதுக்கு போன்ல காசு என சொல்லித்தான் போனை கொடுத்தார் அப்பா. அவர்கள்தான் தேவையென்றால் என்னை கூப்பிடுவார்கள். நான் யாரைக் கூப்பிட்டு வேலை சொல்வது..? என் பேச்சைத்தான் கேட்பார் யாருமில்லையே.
    கையில் இருக்கும் சில்லறைக் காசுகளை பயபத்திரமாக பயன்படுத்த நினைத்தேன்.
    அதிஸ்டம்தான் இரண்டாவது அழைப்பே கிடைத்துவிட்டது.
“ஹல்லோ”
    பெண்குரல் கேட்டது. பெண்ணாகவும் இருக்கலாம். சார் எனவும் கூப்பிடாமல் மேடம் எனவும் கூப்பிடாமல் சமாளிப்பது சிரமம்தான். குரலைக் கேட்டாலே தெரிந்திடுமே என்கிறீர்கள்தானே. அது சரி நீங்கள் எந்த காலத்தில் இருக்கிறீர்கள். இப்போதெல்லாம் குரலுக்கும் உடலுக்கு சம்பந்தமில்லை. இதை வைத்துக் கூட நிறைய பட ஜோக்குகள் வருகின்றன. எனக்கு எழுதத் தெரிந்த அளவுக்கு படம் வரையத் தெரியாது. அதனால் அந்த பட ஜோக்கை உங்களுக்கு காட்ட இயலவில்லை.
    நாளைக்கே நேர்முகத் தேர்வுக்கு வரவேண்டுமாம். அவர்களே காரை அனுப்பிவைப்பார்களாம். மீண்டும் அவர்களே கொண்டு வந்து வீட்டில் இறக்கிவிடுவார்களாம். வேலை கிடைத்தாலும் வேலை கிடைக்காவிட்டாலும் இப்படி செய்வார்களா என கேட்டுத் தெளிந்துக் கொண்டேன். இல்லையென்றால், யார் நடந்து வருவார்கள். அவர்கள் சொல்ன்ன முகவரியே எனக்கு புதிதாக இருக்கிறது. எவ்வளவு தூரமோ என்னமோ.
    மறுநாள் காலை, மடிப்பான சட்டையின்றைப் போட்டுக் கொண்டேன். குறுக்கும் நெடுக்கும் வீட்டு வரவேற்பறையில் நடந்துக் கொண்டிருந்தேன்.
அம்மா;
“எங்கய்யா காலையிலேயே...?”
“வேலைக்கு”
அப்பா;
“எங்கடா..?”
“வேலைக்கு...”
அண்ணன்;
“என்ன சார் காலையிலேயே கலக்கலா இருக்கிங்க...”
“வேலைக்கு...”
    வேலைக்கு என்ற ஒன்றைத் தவிர வேறேதும் சொல்லத் தெரியவில்லை. சொல்லவும் தோணவில்லை.
   சொன்ன நேரத்தில் கார் வந்தது. எதிர்ப்பார்க்கவில்லை. உயர் ரக கார். வீட்டில் எல்லோரும் என்னையே வியந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். கம்பீரமா நடந்து காரின் பின் சீட்டில் ஏறினேன். அப்பதானே நமக்கு கௌரவம். நல்லவேலை டிரைவர் ஒன்னும் சொல்லவில்லை. வீட்டாரின் விரிந்த கண்களை இதுநாள் வரை நான் கவனித்திருக்கவே இல்லை. ஆமாம், அவர்களின் முகம் பார்த்து பேசினால்தானே கண்ணை பார்க்க முடியும். கார் சென்று மறையும் வரை அவர்களின் விரிந்தக் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தேன். பெரிய கண்கள்தான். ஒன்னு தெரியுமா, நான் போட்டிருக்கும் சட்டை, என் அண்ணனுடையது. காலையில் நான் கொடுத்த அதிர்ச்சியில் அண்ணன் அதை கவனிக்கவில்லை. இதை கணித்திருந்தால் அவனுடைய கால்சட்டையையும் போட்டிருப்பேன். ஏமார்ந்தேன்.
     காரில் நான் மட்டும் இருப்பதை இப்போதுதான் உணர்ந்தேன். டிரைவர் எந்த ஒரு அசைவோ பேச்சோ இல்லாமல் காரை ஓட்டிக் கோண்டிருந்தான்.
     என்ன இது , டிரைவர் அல்ல இது டிரைவி.!
     பெண்தான் காரை ஓட்டுகிறாள். நல்லவேலையாக அவள் சட்டை பட்டன் திறந்திருந்ததைப் பார்த்துத் தெரிந்துக் கொண்டேன். அவளின் மூக்கை போலவே கண்ணும் கூர்மைதான். இல்லையென்றால் கண்ணாடியைப் பார்த்தே தன் சட்டையை சரி செய்துக் கொண்டாள்.
     ச்சே என்னை, என்ன நினைப்பாள் அவள். முதல் சந்திப்பிலேயே இப்படியே நடப்பது. இதில் என் தவறு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லையே. ஆமாம். எனக்கு நீல வண்ணம் மிகவும் பிடித்தமான ஒன்று. யார் அவளை அந்த வண்ணத்தில் உள்சட்டை போடச் சொன்னது. அதான் வண்ணம் என்னை இழுத்துவிட்டது.
     அது சரி, ஏன் பெண்னை அனுப்பியிருக்கிறார்கள். ஒருவேளை ஒழுக்கத்தை பரிசோதிக்கவா? இந்த பெண் இதை சொன்னால் எனக்கு அந்த அறிவியல் கூடத்தில் வேலை கிடைக்காமல் போய்விடுமே. என்ன செய்வது.  முதல் சோதனையிலேயே தோல்வியா எனக்கு. இந்த வேலையும் எனக்கு கிடைக்காதா.
    வேலை மட்டும் கிடைக்கவில்லையென்றால், இனி திரும்பி வீட்டிற்கு செல்லவேக் கூடாது.
     கார் அதன் வேகத்தை குறைக்காமல் சென்றவண்ணமே இருக்கிறது. அவள் சட்டையை சரி செய்ததோடு சரி, வேறெதையும் சட்டை செய்யவில்லை. அவள் என்ன இயந்திரமா..? ச்சே இது என்ன சுஜாதா கதையா, இயந்திர மனிதர்கள் வந்து போக.
    கார் நின்றது. அறிவியல் கூடமா இல்லை ஆவிகள் கூடமா எனத் தெரியவில்லை. தனியாக ஒரு தொழிற்சாலை. பக்கத்தில் வேறேதும் இல்லை. மருத்துக்கு மரங்கள் மட்டுமே. மரங்களா எனவும் என்னால் அதை உறுதியாக சொல்ல முடியவில்லை. மரங்கள் ஒவ்வொன்றும் விசித்திரமாக இருந்தன.
    இந்த இடம் குறித்து கேட்கலாம் என்றுதான் காரோட்டிய பெண்ணைத் தேடினேன். இல்லை. வந்திரங்கிய உயர் ரக கார். இல்லை. அதற்குள் எப்படி புறப்பட்டிருக்க முடியும். தெரியவில்லை. புரியவுமில்லை. தொழிற்சாலையின் நடைபாதை தெரிய நானாகவே நடந்துச் சென்றுக் கொண்டிருந்தேன். முழுவும் விளக்குகள். வெளியில் இருப்பதைவிட உள்ளே அதிக வெளிச்சமாக இருந்தது.
     அறைக்கதவின் மூன் வருசையின் நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. ஒரு இளைஞன் மட்டும் உட்கார்ந்திருந்தான். அந்த நிசப்தத்தில் என காலடி ஓசை சத்தமாகக்  கேட்டது. அவன் கவனித்ததாகவே தெரியவில்லை. நிமிர்ந்து நிமிர்ந்து உட்கார்ந்தவாறு இருந்தான். எனக்கு கொஞ்சம் விசித்திரமாக இருந்தது.
    ஆனால் அவன் இப்படி நிமிர்ந்து நிமிர்ந்து உட்காரவேண்டிய அவசியம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. அவனாக இதனை வேண்டுமென்று செய்வது போல உணர்கிறேன். அதான் சொல்லுவார்களே இம்மாதிரி நேர்முகத் தேர்வுக்கு செல்கிறவர்கள், நேரான பார்வையும் நிமிர்ந்து உட்காரும் பாணியும் அவர்களின் ஆளுமையைக் காட்டுமென; அதாகக் கூட இருக்கலாம். ஏன் இவன் அதையே இப்படி கோமாளித்தனமாகச் செய்கிறான்.
      அந்த நாற்காலிக்கு அருகில் இருக்கும் கதவை பற்றி ஏதும் சொன்னெனா..? இல்லையென்றால் இப்போது சொல்கிறேன். அந்த நாற்காலி அருகில் கதவு இருக்கின்றது. கதவின் மேல் கருப்பாய் ஏதோ பூச்சி இருக்கிறதே, என்ன பூச்சி அது. பல்லி இப்படி இருக்காதே, பட்டாம்பூச்சிக்கு சிறகு இருக்குமே.. அட இது சிலந்தி. உயிரோடு இருக்கிறதா இல்லையா. ஒருவேளை ஒட்டிகையோ.
     மணிசத்தம் கேட்டது. நிமிர்ந்து நிமிந்து உட்கார்ந்த மனிதன், அதான் அந்த கோமாளி மனிதன் உள்ளே சென்றான். அதில் பாருங்கள். மணி அடித்ததும் அவனாக எழாமல், யாரோ தள்ளியது போல முன்னோக்கி எழுந்தான்.
      தூரத்தில் மீன் தொட்டி இருப்பதை இப்போதுதான் பார்த்தேன். சரி வெறுமனே உடார்ந்திருக்காமல், எழுந்து அந்த மீன்களை பார்க்கலாம் என நடக்கத் தொடங்கினேன். அந்த இளைஞன் உடார்ந்திருந்த நாற்காலையைத் தாண்டித்தான் செல்லவேண்டும். ஆனால் செல்லவில்லை. நின்றுவிட்டேன். அடுத்த அடியை என்னால் வைக்க முடியவில்லை.
     சொன்னால் நம்புவீர்களாக் கூட தெரியவில்லை. நாற்காலி நடுவுல் குழியாக இருக்கிறது. இல்லை , இல்லை. இது குழியல்ல ஏதோ நூலால் மட்டுமே தைத்தது போல இருக்கிறதே. அதுவும் இல்லை இது சிலந்தி வலை. இந்த சிலந்தி வலை எப்படி அந்த இளைஞனின் பாரத்தைத் தாங்கியது.
     காரணமின்றியே கையை வைத்து அழுத்தினேன். ம்... தொடுதல் சிலந்தி வலையைப் போலத்தான் இருக்கிறது. ஆனால் வலை கிழியவில்லையே. எப்படி. இந்த வலை என் கை அழுத்தத்தை தாங்குவது ஆச்சர்யமா இருக்கிறதே. ஐயோ..! என்ன இது என்னால் என் கையை எக்க முடியவில்லையே. விரல்கள் வலையில் ஒட்டிக் கொண்டதே. ம்...ம்..... வரமாட்டேன் என்கிறதே. என்ன செய்ய..?
     அந்த இளைஞன் எப்படி உட்கார்ந்திருந்தான். ஒருவேளை இதில் மாட்டிக் கோண்டுதான் பல முறை எழ முயன்றானோ? அதே வரிசையில் இருக்கும் என்னிடம் கூட அவன் உதவி கேட்கவில்லையே?
    அப்பா.....ஒருவழியாக கையை எழுத்து விட்டேன். கையில் அந்த சிலந்தி வலையில் அச்சி அப்படியே இருந்தது. சில அடிகள் முன் வைத்து மீன் தொட்டிக்கு சென்ற எனக்கு இன்னொரு ஆச்சர்யம். அந்த மீன் தொட்டியில் மீனுக்கு பதில் சில சிலந்திகள் இருக்கின்றன. மீன் தொட்டிகளில் எலி வளர்த்த காலம் மாறி இப்போ சிலந்திகளையெல்லாம் வளர்க்க ஆரம்பிச்சிட்டாங்களா.
   ஆனால், ஆனால், ,ஆனால். இந்த சிலந்திகளின் முகம் மனித முகம் போல இருக்கின்றன. இது என்ன பைப் துவாரத்தில் இருந்து புதிய சிலந்தி ஒன்று வந்து விழுகிறதே. அது, அது, அது அந்த புது சிலந்தியின் முகத்தைப் பாருங்களேன். எனக்கு நன்றாய் தெரிந்த முகம் போல இருக்கிறது. எப்போது பார்த்தேன் தெரியவில்லையே... எப்போது, எப்போது, எப்போது....? ஆம் ஞாபகத்துக்கு வந்துவிட்டது. முன்பு பார்த்த இளைஞனின் முகம் இது. அதான் நிமிர்ந்து நிமிர்ந்து உட்கார்ந்தானே அதே இளைஞன்.
     இந்த அறிவியல் கூடத்தில் தவறாக ஏதோ நடக்கிறது. அப்படித்தான் என் உள் மனது சொல்கிறது. ஒருவேளை, வேலைக்கு ஆள் தேவைன்னு விளம்பரம் செய்து, இவங்களே கூட்டி போகிறார்கள், யாருக்கும் இடம் தெரியவில்லை. இன்னும் கொஞ்ச நேரம் இங்கிருந்தால் நானும் இப்படி ஒர் சிலந்தியாகிடுவேன்.
    கூடாது. என்னால் இப்படி சிலந்தியாகி, மீன் தொட்டியில் எல்லாம் இருக்க முடியாது.
   அய்யோ! மீண்டும் மணி சத்தம் கேட்கிறது. அந்த கதவு திறக்கப்படுகிறது. இனி ஓட வேண்டும். ஓடத் தொடங்கினேன். ஓடும்போது திறந்திருக்கும் கதவை எட்டிப்பார்த்தேன். எப்படி சொல்வதென தெரியவில்லை. ஒரு மாதிரி நிழல்போல பெரிய என்னமோ ஒன்று நின்றுக் கோண்டிருந்தது. இனியும் தாமதிக்க கூடாது.
    ஆசைபட்ட வேலையும் கோவிந்தா.
    இனியும் எனக்கு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை. ஆனால் ஒன்று, எனக்கு கிடைத்த இந்த வேலை அனுபவத்தை ஒரு கதையாக எழுதலாம்னு நினைக்கறேன். கதை எழுதலாம்னு சொல்லும் போது இன்னொரு நகைச்சுவையும் நினைவுக்கு வருகிறது. சொல்லவா...
     இது சிரிக்க மட்டும், தவறியும் சிந்திச்சிங்கன்னா என் மேல கோவப்படுவிங்க. அப்பறம் என்னை பற்றிய புகார்களை தேடுவிங்க. அதனாலதான் சொல்றேன். இது சிரிக்க மட்டும். இருவர் இப்படி பேசுகிறார்கள்;
“அண்ணே நானும் எழுத்தாளராகனும். அதுக்கு நான் என்ன அண்ணே செய்யனும்”
“ஓ, அதுக்கு நிறைய வாசிக்கனும், பலரில் எழுத்தாளுமையை புரிஞ்சிக்கனும்”
“அண்ணே, நிறைய வாசிக்காமலும், யாருடைய எழுத்துகளையும் படிக்காமலும் , எழுத்தாளராக முடியாதா..?”
“ஏன் முடியாது. நிச்சயமா முடியும்”
“ஹையா... அண்ணே அதை சொல்லுங்கன்னே. நானும் எழுத்தாளராகிடறேன்”
“உங்க முடிவுல உறுதியா இருக்கிங்கலா தம்பி”
“கண்டிப்பா”
“அப்படின்னா. இருக்கற ஏதாவது ஏதாவது எழுத்தாளர் சங்கத்துல மெம்மராகிடுங்க.”
“நெஜமாவா”
“பின்ன, பொய்யா சொல்றேன்”
“அண்ணே, என்னை வச்சி காமிடி கீமிடி செய்யலையே..?”
“அவ்வ்வ்வ்வ்வ்”

     சரி, என்னோட கதையின் முதல் வரியை சொல்லவா; அந்த எட்டுகால் பூச்சியை அப்போதே நசுக்கியிருக்க வேண்டும். செய்யவில்லை. தவறுதான். இனிமேலும் ஏதும் செய்ய இயலாது. கை வலிக்கிறது.

          
   

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்