பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜனவரி 22, 2024

மன்றாடல்

 

இன்றோடு முடிந்தது
என்று அறிவித்து
நடந்தார்கள்

அடுக்கி வைத்தவற்றை
எடுத்து வைக்க
நேரம் இருக்கிறது
உதவிக்கு ஆட்களும்
இருக்கிறார்கள்

கணக்கு வழக்குகளை
எல்லாம்
தனித்தனியாய்ப் பார்த்துக்கொள்வார்கள்

யாருக்கும் எந்தச்
சிக்கலும் இல்லை

நான் மட்டும் ஏனோ
தனியே அமர்ந்திருக்கின்றேன்

இல்லை
இதுவரை விற்ற புத்தகங்களின்
நினைவில் அமர்ந்திருக்கின்றேன்

இதுநாள்வரை
இங்கிருந்தவை இனி
எங்கெங்கோ செல்லப்போகின்றன

புதிய ஸ்பரிசங்களை
அனுபவிக்கப்போகின்றன
ஏதோ ஓர் உள்ளங்கை வியர்வையில் வெட்கப்படப்போகின்றன
நிச்சயம் யாரோ
ஒருவரைத் தாலாட்டப்போகின்றன
யாரோ ஒருவரின் துக்கத்தைக் கெடுக்கப்போகின்றன

எல்லாவற்றையும்
தாங்கதான் வேண்டியுள்ளது

உங்களிடம் மன்றாடியொன்றைக் கேட்கிறேன்

புத்தகங்களை கவனமாகக் கையாளுங்கள் நண்பர்களே

அதுவும் எங்களுக்கு குழந்தைகளே....


Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்