பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

செப்டம்பர் 28, 2022

TikTok பேய்கள்

"அதான இப்ப டிரெண்டு...." என தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள் கோமதி. டிக்டாக்கில் வந்திருந்த சமீபத்திய விளையாட்டுதான் அது. 

கைப்பேசியில் வீடியோவைத் திறந்து வைக்க வேண்டும். அதனை தனி அறையில் வைத்து நடப்பதை பதிவு செய்ய வேண்டும். அந்த அறையில் நம் வீட்டு சின்ன பையனை வைத்துவிட்டு விளக்கை அணைத்துவிட்டு கதவையும் சாத்திவிட்டு ஓடிவிட வேண்டும். அப்போது கைப்பேசி பின்னணியில் மெல்லிய இசையும் அதையடுத்து பயங்கரமான சிரிப்பு சத்தமும் தோன்றும். 

அப்பொழுது தனியாக அறையில் இருக்கும் பையன் பயந்துபோய் கைப்பேசியின் முகப்பில் வீடியோவைப் பார்க்க அதன் தானும் தனக்கு பின்னால் அந்தரத்தில் ஒரு பேய் பறப்பது போலவும் இருக்கும். பயந்து அலறும் பையனின் வீடியோவைப் பிறகு பார்க்கும் போதும் பொதுவில் பகிரும் போதும் பார்ப்பவர்களுக்கு ஒரே ஜாலியாக இருக்கும். 

எல்லாவற்றையும் நேர்த்தியாகத் தயார் செய்துவிட்டாள் கோமதி. தன் பையனை நாசுக்காக அறையில் இருக்க வைக்கிறார். அதற்கு முன்னமே கைப்பேசி தயார் நிலையில் இருக்கிறது. சரியான நேரம் பார்த்து விளக்கை அணைத்துவிட்டு கதவைச் சாத்திவிட்டார்.

உள்ளே பையன் அலறத்தொடங்கிவிட்டான். தனக்கு பின்னால் அந்தரத்தில் பேய் மிதந்துகொண்டிருந்தால் யார்தான் சும்மா இருப்பார்கள். சட்டென பையனின் சத்தம் கேட்கவில்லை. ஒரே அமைதி. பையனுக்கு ஏதும் ஆகிவிட்டதோ என்று பயந்துவிட்டாள் கோமதி. விளையாட்டு வினையாகிவிட்டதோ என்னவோ?

அவசரமாகக் கதவை திறக்கிறாள். உள்ளே பையனைக் காணவில்லை. அறைமுழுக்கத் தேடிவிட்டாள். என்ன செய்வது என தெரியவில்லை. ஏதோ நினைவுக்கு வந்தவர் ஓடிச்சென்று கைப்பேசியைப் பார்க்கலானார்.

கைப்பேசி ஸ்கீரினுக்குள்ளே , பையன் இருந்து செய்வதறியாது துடித்துக் கொண்டுக்கிறான்.

கைப்பேசிக்குள்ளே பையனும் கைப்பெசிக்கு வெளியே கோமதியும் அதிர்ச்சியில் நிற்கிறார்கள். இருவருக்கும் ஒன்றும் பிடிபடவில்லை....

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்