பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

செப்டம்பர் 26, 2022

- டுரியான் -

குமாருக்கு டுரியான் என்றாலே பயம். அதன் வாசத்தைக் கூட அவனால் அனுபவிக்க முடியாது. ஓடி ஒளிந்துக்கொள்வான். இந்த முப்பத்தைந்து வயதில் இப்படியா ஒருவன் இருப்பான் என தோன்றும். தோன்ற வேண்டும்தானே.

அவனது பயத்தைப் போக்குவதற்காக அவனுக்கே தெரியாமல் ஒரு ஏற்பாடு செய்தேன். வீட்டிற்கு அழைத்தேன். அறைக்குள் வசமே தெரியாத அளவிற்கு மறைத்து வைத்த டுரியானை அவன் முன் கொண்டு வந்தேன்

அவனால் எழுந்து ஓட முடியவில்லை. அந்தத் தனிமையில் டுரியானைக் கண்டதும் அழத்தொடங்கிவிட்டான். அது பயத்தினால் வந்த அழுகை அல்ல. இயலாமையால் வந்துகொண்டிருக்கும் அழுகை. கதறி அழ ஆரம்பித்துவிட்டான்.

மெல்ல மெல்ல அவனை ஆசுவாசப்படுத்தினேன். ஒரு நாள் அவனது அம்மா ஆசையாய் கேட்ட டுரியானை நாளைக்கு வாங்கித்தருவதாக சொல்லியிருக்கிறான். அந்த மறுநாள் அவனது அம்மாவிற்கு வரவேயில்லை.

அந்தக் குற்றவுணர்ச்சியின் வெளிப்பாடே டுரியான் மீது பயமாக மாறிவிட்டது. அதனை போக்குவதற்கு வழி தெரியாமல் தத்தளித்துக்கொண்டிருந்தான். உடைந்து அழுதப்பின்னே மனபாரம் குறைந்து இயல்பை அவன் மனம் மெல்ல மெல்ல ஏற்றுக்கொள்கிறது.

#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
#வெள்ளைரோஜா_பதிப்பகம்

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்