பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பிப்ரவரி 14, 2021

'தமிழ்ச் சிறுகதையின் பெருவெளி' - பதிமூன்றாவது கட்டுரையை முன்வைத்து

 

பதிமூன்றாவது கட்டுரையை முன்வைத்து...

    தற்போது சு.வேணுகோபால் அவர்கள் எழுதிய 'தமிழ்ச் சிறுகதையின் பெருவெளி' புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன். மொத்தம் 13 படைப்பாளர்களின் படைப்புகளையும் அதன் உள் வெளி பரப்புகளையும் நுணுக்கமாக ஆராய்ந்து உணர்ந்து எழுதியிருக்கிறார் ஆசிரியர்.
    *பதிமூன்றாவது கட்டுரையாக 'கி.ராஜநாராயணன் : கிராமியப் பன்மைத்தன்மையிலிருந்து சாராம்சததை தொகுக்கும் எழுத்துக்கலை' என்கிற கட்டுரையை எழுதியுள்ளார் ஆசிரியர்.*
    இந்த புத்தகத்தின் கடைசி கட்டுரை. நிறைவான கட்டுரையும் கூட. கி.ராஜநாராயணன் அவர்களை கரிசல் நிலத்தை எழுதியவர் என செல்வது வழக்கம். அவர் கரிசல் வட்டார மனிதர்களைப் பற்றியே அதிகமும் எழுதியுள்ளார்.
    இன்னும் ஐம்பது ஆண்டுகள் கழித்து கிராம மக்களின் அன்றாட இயக்கம் எப்படிப்பட்டதாக இருந்தது என்று காண முனைவோருக்கு கி.ராவிப் எழுத்துகள் முதல் ஆவணமாக அமையும்.
    இவ்வரிகள் என்னை யோசிக்க வைத்தன. நம் நாட்டில் எழுதும் கதைகளில் பெரும்பாலான கதைகள் தோட்ட வாழ்க்கையை மையப்படுத்தியே இருக்கும். இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் இதையே எழுதப்பொகிறார்கள் என்கிற ஏளன பேச்சு பேசுகின்றவர்களும் உண்டு. நம் வாழ்க்கையை நாம் எழுதாமல் வேறு யார் எழுதுவார்கள் என கேட்பவர்களும் உண்டு.
    ஆனால், இன்னும் 50 ஆண்டுகள் கழித்து அக்கதைகள் நம் தோட்ட வாழ்வு பற்றிய ஆவணமாக அமையுமா என்கிற கேள்வி எழத்தான் செய்கிறது. என்ன சொல்கிறோம் என்பதைக் காட்டிலும் எவ்வளவு ஆழ்ந்து ஆழமாக சொல்கிறோமோ அதுதான் பின்னாளில் பேசப்படும் என்பதில் எனக்கு நம்பிககை உண்டு.
    கி.ரா தன் கதையுலகில் காட்டும் மனிதர்கள் பற்றிய கட்டுரையாளர் சிறப்பாகவே சொல்லியுள்ளார். பல கதைகள் குறித்து பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
    அனுபவம் கதையாகும் போது அது எப்படி கலையாகிறது என்பதை இக்கட்டுரைவழி அறிய முடிகிறது. சொல்லப்போனால் வாசிக்க வாசிக்க முடிந்துவிடக் கூடாதே என்கிற ஆசையுடந்தான் கட்டுரையை வாசித்து முடித்தேன்.

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்