பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பிப்ரவரி 15, 2021

‘மலேசிய நாவல்கள்’ – முதல் கட்டுரையை முன் வைத்து

 

‘மலேசிய நாவல்கள்’ – முதல் கட்டுரையை முன் வைத்து


தற்போது ம.நவீன் எழுதிய ‘மலேசிய நாவல்கள்’ புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன். பத்து மலேசிய எழுத்தாளர்களின் இருபத்து ஒன்பது நாவல்கள் குறித்த கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளதாக தனது முன்னுரையில் ஆசிரியர் சொல்லியுள்ளார்.

            முதல் கட்டுரையாக, ‘புனைவின் துர்கனவு’ என்ற தலைப்பில் கோ.புண்ணியவான் நாவல் குறித்து எழுதியுள்ளார்.




            கோ.புண்ணியவான் ‘நொய்வப்பூக்கள்’, ‘செலாஞ்சார் அம்பாட்’ ஆகிய இரு நாவல்களை எழுதியுள்ளார். சிறுகதைகளுக்கே உரிய ஒருமையும் நாவலில் இருக்க வேண்டிய உள் இழைகளும் கொண்ட குறுநாவல்கள் இங்கு நாவல்களாக அங்கிகரிக்கப்படுவதைச் சொல்லி இவ்விரு நாவல்களையும் அத்தகைய பட்டியலில் இருப்பதைச் சுட்டிகாட்டுகிறார்.

            ‘நொய்வப்பூக்கள்’ நாவலின் பலவீனம் கருதியும் அது  ஜனரஞ்சக வாசிப்பிற்கானது என்பதாலும் அதனை சில வரிகளிளேயே சொல்லிவிட்டு அடுத்த நாவலுக்குச் செல்கிறார். ‘செலாஞ்சர் அம்பாட்’, கோ.புண்ணியவானின் இரண்டாவது நாவல்.  மலேசியாவில் அதிகம் கவனம் ஈர்த்த நாவலும் கூட.

            1983-ல் நடந்த உண்மை சம்பவத்தை  அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல்.  இக்கட்டுரை அந்நாவல் கொண்டுள்ள பலவீனங்களையே முன்னிலைப்படுத்துவது போல முதல் வாசிப்பில் தெரியலாம். மறுப்பதற்கில்லை, ஆனால் அந்நாவலையும் அதனை எழுதியவரையும் மறந்து மீண்டும் இக்கட்டுரையை வாசிக்கும் போது,  வரலாற்று பின் புலம் கொண்ட நாவலையோ கதைகளையோ எழுதுவதற்கு எத்தனை மெனக்கெடல்கள் வேண்டும் என்பதைக் காட்டும் முக்கியமான கட்டுரை.

            அதற்கான பல உதாரணங்களை கட்டுரையாசிரியர் இந்நாவலில் இருந்தே எடுத்துரைக்கின்றார்.  நாவலுக்கு களப்பணி இன்றியமையாத ஒன்று. சிறு தகவல் பிழையும் படைப்பைக் கேலிப்பேச்சுக்கு ஆளாக்கிவிடும் என்கிற எச்சரிக்கை உணர்வை இக்கட்டுரைக் கொடுக்கின்றது.

            நாவலுக்கான நுட்பம் எங்கே உள்ளது. எங்கிருந்து கணக்கிடப்படுகின்றது என்பதை சில கேள்விகளின் வழி சொல்ல முற்படுகின்றார். சொல்லாமல் விடுவதாலும் அல்லது சுருங்கச் சொல்லுவதாலும் நாவல் அதற்கான நம்பகத்தன்மையை இழந்துவிடுகின்றது. விரிவாக சொல்ல அனுபவமும் அறிதலும் அவசியமாகின்றது. அதற்கான கள்ப்பணி மிக முக்கியமானது.

            நாவலின் பலவீனங்களையே அதிகம் இக்கட்டுரை பேசியிருந்தாலும், ‘தமிழர்கள் கொத்தடிமைகள் அக்கப்பட்டு எந்தச் கூலியும்  இல்லாமல் நிலத்தைப் பண்படுத்தி பெரும் லாபம் ஈட்டும் வளமாக மாற்றி, அதில் எந்த பலனும் அனுபவிக்காமல் இருந்துள்ளதற்கான சான்றுதான்  ‘செலஞ்சார் அம்பாட்’ என்று சொல்வதன் வழி நாவலை வாசிக்க தூண்டுகின்றார்.

 

#தயாஜி

 

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்