பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

டிசம்பர் 13, 2010

ரத்தச்சரித்திரம்



நிலைகள் மாறனும்; நிஜங்கள் புரியனும்...

நித்திரை மறந்து புறப்படுவோம்......

தோள்மீது தோள் வைத்து தோல்விகளைத் துரத்திடுவோம்...

காலோடு கால் சேர்த்து கஷ்டங்களைக் கடந்திடுவோம்..

வா வா இளைஞனே; வருத்தம் ஏன்..?

வெற்றி நமக்கென்று திருத்தம் செய்...!

நித்தம்நித்தம் யுத்தம் செய்யும்
ரத்தச்சரித்திரம்;

உனக்குமெனக்கும் இருக்கும் பகைதான்;
இந்தச்சரித்திரம்;

யுத்தம்மூலம் பூமி கேட்கும்,
‘ரத்தம்’சரித்திரம்;

துச்சமாக உயிரைக் கேட்கும்,
‘பிச்சைப்’பாத்திரம்;

தீயும்கூட ஆறிவிடும், தீமைமாறுமா;

உடனிருந்தேக் குழி பறித்தால்,
உதிரம் தாங்குமா..

கத்தி கையில் வந்தபின்னே,
கருணைத் தேவையா....?

யுத்த நேரம் வந்தபோதும்
மெத்தைத் தூக்கமா...?

இன்று வீசும் கத்தி ‘என்னை’க்
கொன்று வீசிடும்...

அந்த கத்தி மீண்டும்;
உந்தன் கதவைத் தட்டிடும்..

மீண்டும் மீண்டும் இந்தநிலைதான்;
தொடர வேண்டுமா..?

விட்டுசென்ற தடயங்களின்
தரத்தில் குறைவில்லை...

தன்னை நம்பி தானே செல்ல
ஏனோ மனமில்லை...

உந்தன் அனுக்கள்,
உந்தனோடு மறையவேண்டுமா.....?

விட்டுச் செல்ல பாவம் தவிர
வேறு இல்லையோ..!

நீ;

கத்தி குத்தி செத்துப்போனால்;
கண்கள் தாங்குமா..?
தாயின் மார்பும் தூங்குமா..?

நிலைகள் மாறனும்; நிஜங்கள் புரியனும்...

நித்திரை மறந்து புறப்படுவோம்......

தோள்மீது தோள் வைத்து தோல்விகளைத் துரத்திடுவோம்...

காலோடு கால் சேர்த்து கஷ்டங்களைக் கடந்திடுவோம்..

வா வா இளைஞனே; வருத்தம் ஏன்..?

வெற்றி நமக்கென்று திருத்தம் செய்...!









Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்