பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

டிசம்பர் 13, 2010

ராக்கூத்துச் சாமிகள்....







ராக்கூத்து ஆடும்,
ரங்கன் மகனைத் தெரியுமா..?
என்னோடு அவன்,
இரண்டு ஆண்டு பழக்கம்….

கர்ஜித்துப் பேசி,
கண்வாளை வீசி.....
அவன் போடும் வேசம்,
அத்தனையும் நிசம்................

ஆனாலும் அவன் மாணவன்;
அவனப்பனோ சாதாரணாமானவன்....

எங்களோடவன் அமரும் போதும்,
எதிரெதிர் தினம் கடக்கும்போது..
தலைகுணிவான்,
எங்கள் வசைமொழியால்;

கூத்தாடிமகனென குலுங்கிக் குலுங்கிச் சிரிப்போம்..
ஆத்தாடி நாங்க அவ்வளவு மோசம்;

எங்ககிட்டவன் எதுத்துப் பேசமாட்டான்,
ஏண்டான்னு கேட்டா அதுவும் சொல்லமாட்டான்,

ஆனாலுமவன் நல்லாப் படிப்பவன்;

இன்னிக்கோடு சேர்த்து,
ஆறுநாள் அவனைக் காணோம்...

எங்கடான்னு விசாரிச்சோம்;
என்னென்னமோ கேள்விபட்டோம்;

இனி ரங்கன் மகன்தான்..
ராக்கூத்து ஆடனுமாம்...!

அவனாட ஆட்டம்தான்,
இனி;
அவன் குடும்பத்தை காக்கனுமாம்...

சினிமா சின்னத்திரை;
சீரியஸா ஆனபின்னே,

சிந்திக்கவைக்கும் தெருக்கூத்தை,
சிலராச்சும் பார்கனுமே...

அம்மிக்கல்லு ஆட்டுக்கல்லு;
அதுபோல இனிமேலு;
தெருக்கூத்தும் ஆகிடுமே...

கண்காட்சி பொருள் போல,
காட்சிக்குத்தான் இருக்கும்....

இதை நம்பி பொழச்சவங்க….
இனி எங்கப்போவாங்க...

ரங்கன் மகனுக்கப்பறம்,
ராகூத்தை நான் பாக்கலை...
அதைத் தொடர ஆளில்லை..

என்னைப்போலின்று

எதுகையும் தெரியாமல்..

மோனையும் புரியாமல்..

சீர் வரிசை-யில் நிற்காமல்....

சந்தமும் இல்லாமல்

எழுத்து வரிசையிலும்;

இன்பம் இல்லாமல்...

எண்ணியபடி எழுதி...

மரபுகளை மறந்ததுபோல்...

தெருக்கூத்தும் போயாச்சி...
தெருவெல்லாம் அழுக்காச்சி...

உழைப்புகளை வெறுத்தாச்சி...
உழைப்பவர்களை தொலைச்சாச்சி...

சீ...சீ.....காட்சி
திரைக்கு வந்தாச்சி..

தெருகூத்து ஆட்டம்
கேவலம் என்றாச்சி....

பசிக்கானா ஆட்டம் போய்;
ருசிக்கான நோட்டம்; வந்து...

கண்ணைக் கெடுக்க காட்சி தந்து....
கெட்டுக்குட்டிச் சோறாச்சி...

ரங்கன் மகன் போல;

சொக்கன் மகனுக்கும்
சொல்லவேண்டியக் கதையுண்டு...

சொல்லும் நேரம் வரட்டும்
சொல்லிவிடுகிறேன்........

அதுவரை.............
ராக்கூத்து சாமிக்கு
ரங்கன் மகன் சார்ப்பில்
அவன் கலைக்கு
என்னால் முடிந்த அஞ்சலி.....


இப்படிக்கு தயாஜி

Related Posts:

  • இது பேய்க்கதை அல்ல..   பூஜை நடந்துக் கொண்டிருக்கிறது. பூசாரியும் அவரது உதவியாளனும் மாற்றி மாற்றி மந்திரங்களைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். எப்படியும் இன்று பே… Read More
  • ஒரு கசமுசா கதை      திரையரங்கம். சமீபத்தில் கொரிய படங்களுக்கு ரசிகைகள் அதிகமாகி விட்டார்கள். அதனால் மொழி விளங்கா விட்டாலும் பரவாயில்லை என ஒரு கொ… Read More
  • ஏய் டூப்பு..   எல்லாம் தயார். ஆனாலும் மீண்டும் பரிசோதிக்க வேண்டும். நாயகன் தனக்கான டெம்போவில் இருந்து இறங்கினார். ரசிகர் பட்டாளம் ஆரவாரம் செய்தது. தனது … Read More
  • அவளின்னும் பிறக்கவில்லை   அவளும் எதிர்ப்பாக்கவில்லை. சட்டென கடவுள் கண்முன் தோன்றுவார் என யார்தான் எதிர்ப்பார்ப்பார்கள். நம்பவில்லை. அவளுக்கு அதிலெல்லாம் நம்பிக்கைய… Read More
  • எழுத்தாளரின் வாசக கடிதம்   அவர் பிரபலமான எழுத்தாளர். உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். ஒவ்வொரு வாரமும் அவரது படைப்புகளில் ஏதாவது ஒன்று இதழ்களில் வெளிவந்துவிடும். அடுத… Read More

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்